RSS

நலமிக்க நல்லூர்

எத்தனை ஆண்டுகள் நிறைவுற்றாலும் எத்தரையில் நாம் பணி செய்தாலும் நித்திரையில் கூட மறக்கவொண்ணா நினைத்திடச் சுவைதரும் நினைவுகள் நம் பிறந்த நிலத்தின் பால்ய காலம் தொட்ட வாழ்க்கையில் தான்….

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் உள்ளத்துக் கிடக்கைகள், அவனது உறவு சார்ந்த சிந்தனைகள், அவனது தாய் மண்ணில் சொந்த ஊர் சார்ந்தே அமைகின்றன..

தன் தாயை தன் அன்புக்குரிய உறவுகளை அவன் இதயம் நெகிழ நேசித்து மகிழ்வது போல தனது சொந்த ஊரையும் அவன் நேசிக்கிறான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

அவ்விதம் அமைந்து இன்று வரை என் நெஞ்சோடு நினைவுகளை விரித்துப்பரத்தி வைத்து நேசத்தை விதைத்து, பாச உறவுகளுடன் பண்புடன் பழகி நான் களித்த என் பிறந்த ஊரான கடையநல்லூர் எனும் அழகிய நகரம் எனக்கு உலகின் மற்றெல்லா நகரங்களைக் காட்டிலும் அதன் இயற்கை அழகில் இன்பம் தரும் பண்பாடு மற்றும் கலாச்சார சுற்றுப்புற சூழலில் மிகைத்தே நிற்கின்றது.

இங்கு வாழும் என் இஸ்லாமிய உறவுகளின் வாழ்க்கை சூழல், நம் உறவுகளின் கடல் தாண்டிய கைப்பொருள் தேடும் சித்தாந்தத்தின் படி தன் தகப்பனை, சகோதரனை, கணவனை, மகனை என தன் உறவுகளின் அங்கங்களை அன்கிங்கெனாதபடிக்கு எங்கெங்கேயோ அனுப்பி வைத்து அவர்தம் ஈட்டும் நிதி கொண்டு அன்பொழுக வாழும் அழகான அமைப்பு.

நமக்கான உறவுகளின் நீட்சி நம்மையொத்த பிற ஊர்க்கார உறவுகளைப் போல் ஊரைத்தாண்டி அமையாமல், நமது சொந்த பந்தங்கள் மற்றும் சம்பந்தங்கள் திருமண வடிவிலான பந்தங்கள் அனைத்தும் பெரும்பாலும் ஏற்கெனவே நம்முடன் உறவுற்றிருக்கும் அல்லது கொஞ்சம் தூரத்து உறவிலான குடும்பங்களுடன் நம் ஊருக்குள்ளேயே மட்டுமே அமைத்து வாழ்ந்து வருகிறோம்…

காலங்கள் கடந்து, நாம் நமது வசிக்கும் எல்லையை மிக அதிக அளவில் விரித்து நான்கு திசைகளிலும் வயல வெளிகள் தோப்புகள் என நமக்கு அருகில் உள்ள அனைத்து பூமிகளையும் வீடுகளாக்கிய பின்னர், இன்றும் நாம் எல்லைக்கல்களை நட்டு நமது மண் மனைகளைப் பெருக்க அரும்பாடு பட்டு வருகிறோம்.

மொத்தத்தில் மக்கள்தொகை பெருகி இன்றைய கடையநல்லூர் மிகப்பெரிய ஊராக புதிய தோற்றத்தில் எண்ணற்ற பொறியாளர்களையும் மருத்துவர்களையும் பட்டதாரிகளையும் ஏனைய கல்வியாளர்களையும் ஆண்களிலும் பெண்களிலும் பெற்று மார்க்கக் கல்வி கற்ற ஆலிம் ஆலிமாக்களையும் சேர்த்து கல்வியறிவு செம்மையாய் பெற்ற கடையநல்லூராக நாம் பெருமைப்பட முடிகிறது.

இயற்கையிலான தத்துவ அடிப்படையில் மேடுகள் என இருப்பின் அங்கு பள்ளம் என்பது தவிர்க்க முடியாதது போல பேரும் பெருமையும் மிக்க நமது மண்ணில் சில ஒழுக்கநெறி தவறிய நிலைப்பாடுகள்… அவை நாமெல்லாம் உயிராய் மதிக்கும் நமது மார்க்கத்துக்கும் சமூக சூழலுக்கும் இழுக்கு வரும்படியான நிகழ்வுகள் சமீப காலத்தில் அடிக்கடி நிகழ்வதும், பின்னர் அது மறக்கப்படுவதுமாய் கழிகிறது..

இங்கே முக்கியமாக நாம் கருத்தில் கொள்ளவேண்டிய செய்தி இன்றைய கூட்டமைப்பில் நமது மக்களின் அனைத்து செயல்பாடுகளும் ஒரு கண்காணிப்பில் இல்லை.

குடும்ப உறுப்பினர்களின் ஒளி ஒலி ஊடகங்களுடன் மற்றும் இணையங்கள் அலைபேசி தொடர்புகள் அனைத்தும் அல்லாஹ் ரசூலின் விருப்பத்திற்கிணங்க அமைந்திடவில்லை.

நம் பெண் மக்களைப் பற்றிய செய்திகள், வதந்திகள், அவதூறுகள் மிக எளிதாக பரவி அதனை பொழுதுபோக்குக்காக பேசி சம்பந்தப்பட்டவர்களை காயப்படுத்தும் போக்கு நீங்கவில்லை.

அவசியம் இன்றி அடிக்கடி காவல் நிலையங்கள் வழியாக நம் சொந்தப் பிரச்னைகள் அணுகப்படுவதும் அவை செய்திகளாக ஊடகங்களில் இணையம் வழி பகிர்ந்து மனம் வேதனைப்பட வைப்பதும் தொடர்கிறது…

நம் எண்ணங்களில் எத்தனையோ வேதனைகள் இருந்தாலும் இனி எப்படி யார் எந்தவகையில் இவற்றை சீர் செய்வது என்பதை தெரியாமல் திசை அறியாது கை பிசைந்து நிற்கும் நிலையில் நாம் பலவாறு சிந்திக்க வேண்டியுள்ளது….

இது வரை நமது ஊரில் ஊர்க்கட்டுப்பாடு (?) என்ற ஒன்றுக்கு நாம் கூட்டும் அனைத்து வட்டார வழியிலான பெரியவர்கள் இனி ஒதுங்கி ஆலிம்கள் உலமாக்கள் கையில் ஊரின் பிரச்சினைகள் அலசப்பட்டு அவ்விதம் அவர்கள் பள்ளிவாசலில் வைத்து எடுக்கும் முடிவுகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட செய்தாலோ.

ஒரு சமுதாயத்தின் ஆணிவேராக உள்ள குடும்பப் பெண்கள் மார்க்க அறிவு பெறும்படியாக நிறைய மார்க்க விளக்க கூட்டங்கள் வாராவாரம் அந்தந்த வட்டாரங்களில் நம் ஊரில் உள்ள மகளிர் மதரஸாக்களின் ஆலிமாக்களை கொண்டு நடத்தப்பட்டாலோ.

வெகு நாட்களாக தொலைந்திருந்த பார்ட்டி கலாச்சாரம் தண்ணியடித்து கூத்தடிக்கும் போக்கு இப்போது மீண்டும் ஒன்றிரண்டு ஆண்டுகளாக தலைஎடுத்துவிட்டதை காணும்போது வேதனை அளிக்கும் அதே நேரத்தில் சங்கங்களில் சேர்ந்து இளம் பெண்களை கேலி செய்யும் இளைஞர்களை கண்டு அம்மாதிரியான சங்கங்களை பெண்டு பிள்ளையர் நடமாடும் பரபரப்பான இடங்களில் இருந்து அப்புறப் படுத்த முயற்சித்தாலோ…

நமது இஸ்லாமியப் பெண்டிர் பிற மதத்தை சேர்ந்தவர்களை தனது நட்பாகக் கொண்டு அவர்களை தனது வாழ்க்கைத் துணையாகக் கொள்ளும் அளவுக்கு போய்விட்ட நிலையை நாம் எண்ணி,இஸ்லாமிய வாழ்க்கை நெறியின் கண்ணியத்தை அவர்கள் உணரும் வண்ணம் குறைந்தது எட்டாம் வகுப்புக்கு மேலே பயிலும் மாணவர்களின் வகுப்புகளில் மார்க்கக் கல்வி கற்ற ஆலிம் ஒருவரால் பள்ளிக்கூடங்களில் தீனியாத் போதிக்கும் பாடவேளை தேர்வுகள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டாலோ…..

என எண்ணங்கள் மனதோடு கிடந்தது மாய்மாலம் செய்யும் அதே வேளையில் …

எத்தனையோ மைல்களுக்கப்பால் தன் சகோதரியை தாயை, மனைவியை, பெற்ற மக்களை விட்டுவிட்டு அவர்கள்மீதான நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் உள்ளங்கைகளில் வைத்து உள்ளம் நடுங்க உயிர்வாழும் எண்ணற்ற தேசாந்திரிகளுக்கு அவர்தம் குடும்பம் ஆரோக்கியமான சூழலில் தான் உங்களுடன் பயணிக்கிறது என்பதை ஊர்வாசிகள் எப்பொழுது எப்படி உணர்த்தப் போகிறோம்..

ஆற்றாத துயரத்துடன் அல்லாடும் இழிந்து கிழிந்து போன நம் ஊரின் மானச் சட்டையை எப்படி யாரைகொண்டு தைக்கப்போகிறோம்.

ஒவ்வொரு குடும்பத்தலைவனுக்கும் அவனது மனைவி, மக்கள் மீதான பொறுப்பு உள்ள போது அதனை நாம் எளிதில் எங்கனம் உதாசீனம் செய்ய முடிகிறது..

நாளைய மஹஷரில் இதற்காக நம்மிடம் என்ன விடை உள்ளது.

நம் கண் முன்னேயே அரங்கேறும் இந்த அவலங்கள் அசிங்கமான தருணங்கள் நிற்பது எப்போது…

இணையங்களில் செய்திகளில் கடையநல்லூர் எனக் குறிப்பிட்டு விமர்சனங்கள் செய்யப்படும் போக்கு என்று நிற்கும்….

சிவப்பு நிற அறிவீனக் கழுகுகளின் அசிங்கமான விமர்சனங்களில் இருந்து நம் ஆலிம் பெருமக்கள் ஊர் பெரியவர்கள் மற்றும் நம் அமைதியான அன்புற்ற இஸ்லாமிய வாழ்க்கையைக் காப்பாற்றி அதனை நாம் வென்றெடுப்பது எப்படி…

எளிதாக தீர்வு செய்யப்பட ஒரு சம்பவத்தை மாநில ரீதியாக பெரிதாக்கி நம் ஊரின் மீதும் நமது கட்டுக்கோப்பான வாழ்க்கையின் மீதும் அதன் கண்ணியத்தை இழிவு படுத்தும் விதமாக கட்டுரை எழுதும் அந்த கம்யூனிஸ ஏடுகள் நம்மைப் புரிந்து நமது பக்க நியாயங்களை வேண்டுமென்றே ம(றை)றுக்கும் அவர்களைப் போன்ற நம்மிடையே வாழும் செங்கொடி ஏந்தும் நரிகளை இனம்கண்டு எவ்விதம் அவர்களை கையாளப் போகிறோம்…

செங்கொடிக்கு…

விவாதம் செய்கிறேன் பேர்வழி என முகத்தைக் காட்டாது விதண்டாவாதம் செய்து அமைதியான ஊரின் மீது அசிங்கமான சேற்றை வாரி இறைக்க ஆசைப்பட்டு ஆப்பசைத்த குரங்காக உங்கள் செங்கொடி இணைய தளத்துக்கு திண்டுக்கல் பூட்டு ஒன்றைப் போட்டுப் பூட்டி சாவியை தொலைத்து இன்று வேறுவேறு பெயர்களில் கடையநல்லூர் வாசிகளின் கல்பை உடைத்துக் களமாட எண்ணும் நீங்கள் தலைமறைவு யுத்தம் செய்யாமல் உங்களின் பெயர் கூறி உ(எ)ங்களின் ஊரில் சேட்டையை இனி தொடர முடியுமா எனப் பாருங்கள்….

கடையநல்லூர் என்பது ஊர்ப்பெயர் தான் அஃறிணை தான்….ஆயினும் ரத்தமும் சதையுமாக உறவுக்கூட்டம் உயிருக்குயிரான இஸ்லாத்தின் பெயரில் ஒன்றுடன் ஒன்றாய் பின்னி ஓர் அணியில் உள்ளே உயிரோடு தான் வாழ்கிறோம்…

எங்களின் உயிருக்குயிரான உறவுகளை நேசிப்பது போல எங்களின் பிறந்த மண்ணையும் நாங்கள் நேசிக்கிறோம்…. தூற்றுவதை நிறுத்துங்கள்…

 

ஓசையின்றி அசையும் தறிகள்….

அது நடந்தது முப்பது வருஷம் முந்தி, நம்ம ஊரில அப்பவெல்லாம் வீடுகள் பெரும்பாலும் ஓடு போட்டும் ஒன்னுரண்டு கூரையும் தவிர ஒத்தமட்டு ரெட்டமட்டு போட்டு கட்டிய வீடுன்னு தெருவெங்கும் இருக்கும்.

தரவன்மார் வீடுகள் கொஞ்சம் வசதியானவை, மற்றபடி எல்லா வீட்டிலும் ஒன்று இரண்டுமாய் தறிகள் இருக்கும். வாப்பவோ அண்ணன்மாரோ இல்லனா வீட்டிலுள்ள பெண்பிள்ளையோ யாராவதுமோ நெய்து கொண்டிருப்பார்கள்… ஓரத்தில் ஒரு ராட்டும் அடுத்து குத்தி மற்றும் புடுத்தலைன்னு அந்த ஓடும் தறிக்கு உதவும் நூலை கண்டாக்கி தார் சுத்திக் குடுக்கவும் ஒரு ஆள் உக்காந்திருக்கும். சில வேளை அலவு தள்ள, அறுந்த இழை முடிய ன்னு ஆள்கள் அந்த கஞ்சியூத்தும் கைத்தறியைச் சுற்றி…. வாப்பா வீட்டில் இல்லன்னா தரியின் இழுப்பில் அதன் சந்தச் சத்தத்திற்கு ஏற்றார்போல ஒரு பாட்டு நெய்பவரால் அனுபவித்து பாடப்பட்டு நம் காதில் ரீங்காரமிடும். தறியின் ஆடுவாசலில் எச்சில் துப்பி வைக்க… வாயில் எப்பவும் தூள்பட்டை வாங்கி அதை தன் பற்கள் மட்டும் பல் இருங்குகளில் தேய்த்து ப்பூ…என்று உதடுகளை பிளிரிவிட்டு பின்னர் தன் தறியிழுப்பில் கவனம் செலுத்துவர்.

இன்னைக்கு வாப்பா காலையிலேயே பாவாத்தி முடிஞ்சவுடன் குளிக்க கிளம்பிவிட்டார் என்றால் அவர் தரவன் வீட்டுக்கு செல்ல ஆயத்தம் செய்கிறார் என அர்த்தம். அவர் செல்லும்போது கையில் மறக்காமல் பற்றூளிச் சிட்டை எடுத்துக்கொண்டு மறுகையில் நெய்த சரக்கையும் சாம்பிலிருந்து கிழித்து உருளையாக்கி எடுத்துப் போவார். தரவன் வீட்டில் உட்கார்ந்த உடன் அங்கு வேலை செய்பவர்களுடன் தானும் கலந்து அங்கு ஏற்கெனவே கிழித்துக் கொண்டிருக்கும் வேறு நபர்களின் சரக்கை அந்த நபர்களுடன் சேர்ந்து அளக்கவும் கிழிக்கவும் மடிக்க்கவுமாய் உதவுவார். அப்பொழுது அங்கு பட்டறைப் பையன் சாயா வாங்க ஒரு தூக்குவாளியை எடுத்துக் கிளம்பும்போது இவருக்கும் அரை கிளாசு சாயா கிட்டும். அது அமிர்தமாய் இனிக்கும். தரவன் ஊர் மற்றும் அவரது வீட்டு விசயங்களை கரிசனத்துடன் வினவுகையில் பதிலளித்துக் கொண்டே தனது சரக்கு எடுத்து விரிக்கப் படுவதை கண்டதும், மனசு பதட்டமடையும். சரக்கில் சூத்தை சொள்ளை சொல்லப்படாமல் இழைப்பறைப்பு இல்லாமல் நல்ல முறையில் அது காசாக வேண்டி கல்பில் நாகூர் பாதுஷா முதல் படிச்ச நாயன் வரை  வேண்டிக் காத்துக்கிடப்பார். பட்றையில் ஊழியர் லென்சை எடுத்து இழை எண்ணும் போதும் திருப்பி லென்சை வைக்கும் போதும் உயிர் போய் திரும்பி வரும்… கடைசியில் சிட்டையில் பதிவு செய்த பிறகு அதனை பார்ப்பார். கூலி எழுதப்பட்டிருக்கும் அது தான் வாங்கிய முந்தைய பற்றை கொஞ்சம் கழித்து அவரை விடுபடுத்தும். பத்தோ இருபதோ செலவுக்கு வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்வார்.

வாப்பா வீட்டுக்கு வந்தால் வீடு நிசப்தமாக இருக்கும். உம்மாக்கு எப்பவும் வாப்பாட்ட பயம் தான். அவர் பிள்ளைகளின் நெசவு சம்பந்தமாக குறை சொல்ல வேண்டி வந்தால் உம்மாவிடம் தான் சொல்வார். வீட்டுச்செலவுக்கு கறி,புளி வாங்க ஒவ்வொரு தேவைகளுக்கும் வாப்பாவின் சட்டைப்பையிலிருந்து காசு பெறும்போதும் உம்மா போராடும்.திண்ணையில் வாப்பா உட்கார்ந்து தறிகளின் சப்தஓசைகளைக் காதில் வாங்கியவாறு ஒய்வு எடுப்பார். த்றிச்சப்தம் நின்றாலோ நெய்கையில் ஏதாவது இழை முடிய தறியின் ஆட்டம் தடைபட்டாலோ சன்னல் வழியே பார்த்து எழுந்து வந்து உதவுவார்…..

மதரசா பள்ளிக்கூடம் என கல்விகற்க செல்லும் பிள்ளைகளின் படிப்பு அதிகபட்சம் எட்டாம் வகுப்புவரை எல்லைக்கோடுகளுடன் இருந்தது… எல்லாத் தெருக்களிலும் நடுவில் ஒரு வாறுகால் ஓடும அதில் பாவாத்திய பசைத்தண்ணியில் இருந்து சில வீடுகளின் மடைகளும் கம்பெனிகளின் கழிவுச்சாயங்களும் கழுவி ரசாயனபிளீச்சிங் வாசனையுடன் செல்லும் அல்லது தேங்கிக் கிடக்கும்… பிள்ளைகளின் கை கால்கள் தொடை என எல்லா இடத்திலும் சொறியுண்டாக்கும் சிரங்கு இருக்கும். வகுப்புகளில் குச்சிபோடும் டப்பாக்களாக பயன்படும் சைபால் களிம்பு தான் அஞ்சுபைசா பத்து பைசாக்கு வாங்கி அந்த சிரங்குகளை கட்டுப்படுத்தப் பயன்பட்டது…

பள்ளிக்கூடம் விட்டு வரும் வழியிலேயே தெருவில் ரோதை கோலி என பூடு கட்டியும், பம்பரம் செல்லாங்குச்சி என மனதை மயக்கும் விளையாட்டுக்காக யாருவீட்டுத் திண்ணையிலாவது பாய்க்கட்டு வச்சிட்டு ஆடத் துவங்குவதுமாய், மாலை பொழுதை வரவேற்போம்.

இன்று நம் வீட்டில் பயன்படுத்தும் கிரைண்டர் வாஷிங்மிஷின் டிவி டெக் ஸ்பீக்கர் கட்டில் எப்பொழுதும் குடித்த ஈரம் காயாத சாயாக்கிளாசு போல் அன்னைக்கு இல்லாததால் தறியின் ரோலைத்தாண்டி ஒரு மரப்பெட்டியில் அவர்களின் விளையாட்டுக் கருவிகள் ரோதையும் கோலிகளும் தேக்குப் பம்பரமும் என குவித்து வைத்திருப்பர்.. அந்தப் பம்பரத்தை உரிமையாக்க அதை வாங்கச்சொல்லி அடம்பிடித்து காவிமண்பூசி மெழுகிய தரையில் புரண்டு கண்ணீர் விட்டு அழுது பெற்ற பதினைந்து பைசாக்கள் ஆசாரிக் குடியின் அழகிய வெந்தேக்கு மற்றும் கருப்பு நிற தேக்கு பம்பரங்களாக அவர்களின் உள்ளங்கையின் சூட்டுடன் உறவாடின…

அந்த நெய்தல் நிலப் பொழுதுகள் பாலையின் கடும் வெப்பத்தால் களவாடப்பட்டு கொஞ்சம் காசைக் காட்டி கண்ணீரை விதைத்து தகப்பனையும் அவன் பிள்ளைகளையும் ரத்தம் வேறு சதை வேறாய்ப் பிய்த்துப் பிரித்துப் போட்டு ரணகளஆட்டம் போடும் இந்தக் காலத்தை நினைக்கையில்….

ஒன்று மட்டும் உண்மை. தறிகள் அன்று வீட்டோடு அசைந்து கொண்டிருந்தன ஆனால் இன்று அவை மனித வேடம் பூண்டு ஆகாய மார்க்கமாய் விமானம் ஏறி அசல் தேசத்தில் வந்து அசைகின்றன.. சரக்கு பதம் பார்ப்பவன் வேற்று மொழிபேசுகிறான். இவன் சம்சாரத்துடன் காற்றில் பேசி காதல் கொள்கிறான்.

 

பந்தலுக்குள் பதினாயிரம்….

 வழக்கம் போல அன்றும் தொழுதுவிட்டு சலாம் கொடுத்தபின் தொடர்ந்து புதிய சலாம் பின்னாலருந்து அஸ்ஸலாமு அலைக்கும் ஓங்கி ஒலித்த அந்தக் குரல் வந்த திசையைப் பார்க்க, தொழுகையாளிகளை திருப்பிய அந்த சலாம் ஒரு இளைஞனிடமிருந்து. தொடர்ந்து அவர் சொன்ன சில செய்திகள் அந்தப்பள்ளிவாசலில் சுவர்களில் பட்டு விடைதேடி எங்கோ செல்லத் தலைப்பட்டன.

“உதவி செய்யுங்கள் வாப்பா எனக்கு இரண்டு சகோதரிகள் கலியாணம் செய்துவைக்க வசதியில்லாமல் கஷ்டப்படுறேன்.கையில காசில்லாமல் அவர்களைக் கட்டிக்கொடுக்க வழியில்லாம உங்களின் உதவி தேடி வந்திருக்கேன். அல்லாஹ்வின் குமர்களுக்கு நீங்கள் செய்யும் உதவி உங்களுக்கு ஆகிரத்துக்கும் கூட வரும்”….

கையேந்தி நின்றவரின் வாயில் கிளம்பிய இந்த வார்த்தைகள் மனசை என்னவோ செய்தன. நாற்பது பேர் தொழுது முடித்துச் செல்கையில் கையில் கொடுக்கும் ஒரு ரூபாய், ஐம்பது காசுகள் எல்லாம் அவரது அன்றாட சாப்பாட்டுக்கு கூட தேறுமோ என்னவோ….

கீழே ஒரு நல்ல துண்டு ஒன்றை விரித்திரிந்த அந்த சகோதரர் தன்னைக் கடக்கும் முசல்லிகளையும் துண்டில் விழும் சல்லிகளையும் பார்வையினால் படம் பிடித்துக் கொண்டு நிலையாக நின்றார் வெளிப்பள்ளியில்…

அவருக்கு சுமார் முப்பது முப்பத்தைந்து வயது இருக்கலாம்… கொஞ்சம் மழிக்காமல் முகம் மயிரோடி இருந்தது… அருகில் தப்லீக் ஜமாத்தார்களின் மசோரா நடந்துக்கிட்டிருந்தது, எப்பா கொஞ்சம் தள்ளி நின்னு கேளு , அதோ அந்தத் தூணுக்குப்போ… இப்படித்தான் நிறைய பேர் வாராங்க. அவங்களுக்கு காசு புடுங்க இது ஒரு வழி இப்ப இவன் கையில் கிடைச்சது குமருகாரியம், தொழுது விட்டுக் கலைந்த அந்த வயதான மனிதர் தனது தாடியை நீவிக்கொண்டே சக நண்பரிடம் சொல்லிக்கொண்டு போனார்…

தனது குடும்பம் தனது தேவை தனது கடமை முதலியன ஒரு இளைஞரை பிச்சை எடுக்க வைத்ததென்னவோ உண்மை…. அவர் கோரிக்கையின் ஒளிப்பில் தொக்கிநிற்கும் குமருகாரியம் உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை… அப்படியென்ன மலை இங்கு பெண்களை திருமணம் செய்து கொடுப்பது யோசிக்க யாரும் முன்வருவது இல்லை. காரணம் தன் வீட்டின் தன் மக்களின் ஆண் அல்லது பெண் மக்களின் திருமணங்கள் தமது பெருமையை வசதியை தனது பணபலத்தை காட்டுவதற்காக நாம் பயன்படுத்த ஆரம்பித்து நாட்கள் பலவாகிவிட்டன…

நாம் வாழும் இந்த மார்க்கத்தில் நமக்கு வழிகாட்டிய நபியின் சபையில் வழக்கமாக அமரும் தோழரின் திருமணம் கூட நபியின் கவனத்திற்கு வராமல் எளிமையாக நிகழ்ந்ததாக வரலாற்றுப் பதிவுகள் உண்டு… அவை ஏட்டுச்சுரைக்காய் அளவில் நம்முடன் நம் வாழ்க்கையில் எந்த விதத்திலும் தொடர்பு படுத்தாதவாறு கவனமாக நாம் பார்த்துக் கொண்டோம்…

நம் சமுதாயம் இன்று திருமணம் என்பதை ஒரு பெருத்த செலவுடன் கூடியதாக ஆக்கிவிட்டது. இத்தனைக்கும் அந்தத் திருமணத்திற்காக நிகழ்த்தும் அததனை பணவிரயங்களுக்கும் அதற்கான நிகழ்வுகளில் நம் ஆலிம் பெருமக்கள் மார்க்ககல்வி கற்ற கல்வியாளர்கள் ஆலிமாகள் எனப்படும் நவீன இஸ்லாமிய பெண் கல்வியாளர்கள் தவறாமல் கலந்துகொள்கிறார்கள்…

அதன் தொடக்கமாக அவர்களே உறுத்தல் வெத்தலபாக்கு (நிச்சயம் செய்தல்) தொடங்கி தனது முகல்லா மக்கள் கூடியுள்ள சபையில் “எல்லாம் பேசிக்கிட்டீகளா”ன்னு பூடகமாகக் கேட்டு சரி பாத்திஹான்னு சொல்லி கைப்படம் விரிக்கிறது பாவமில்லையா….

இஸ்லாம் எளியது இது நபி சொன்னது.

இஸ்லாமிய வழித்திருமணங்கள் எளிமையானவை நாம் அனைவரும் நன்றாக உணர்ந்தவை…

அப்படியானால் இவை என்ன எங்கிருந்து நாம் கற்றோம். எப்பொழுது நாம் விடுவோம்…

தன்னுடன் பிறந்த சகோதரிகளுக்காக தன் சமூகத்தாரின் மத்தில் சமுக்கம் விரித்து பிச்சை கேட்கும் நிலைக்கு இன்று இஸ்லாம் உண்மையில் ஒரு இஸ்லாமியனைத் தள்ளுமானால் அதைவிட வெட்கக்கேடு வேறு என்ன…

சில வருடங்களுக்கு முன் ஒரு நோன்பு நாள் இரவில் மக்கா மஸ்ஜித் இமாம் காசிமி யின் தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பில் கேள்விபதில் நிகழ்ச்சியில் அவரிடம் கேட்டேன். இங்கு சமூக அளவில் நிகழும் அனைத்து அனாச்சாரங்களும் உலமாக்கள் முன்னிலையில் அவர்களின் பங்களிப்பில் தானே நிகழ்கிறது…. அதை நம் அசரத் மார்கள் எப்போது முழுமையாக எதிர்க்கத் தலைப்படப் போகிறார்கள், உதாரணமாக பணம் வாங்கி நடத்தும் திருமணங்களில் நாங்கள் பங்கெடுக்க மாட்டோம் என உலமாக்கள் கூடி ஒரு முடிவு எடுத்து அதனை நடை முறை செய்து உங்களின் மதிப்பை எங்களைப் போன்றோர் மத்தியில் எப்பொழுது உயர்த்துவீர்கள் எனக்கேட்டேன்…

கேள்வியை உள்வாங்கி அவர் சொன்னது, இந்த சமூக கேடுகள் அதனால் விளையும் பாதகங்கள் எல்லாம் மிகக் கொடுமையானவை அல்லாவும் ரசூலும் வெறுப்பவை இதில் மாற்றுக் கருத்து இல்லை ஆயினும் ஏழை உலமாக்களும் தங்களின் பிழைப்புக்கு அந்த முகல்லத்தை சார்ந்து தானே வாழ வேண்டியுள்ளது… வட்டி வாங்கும் பள்ளிவாசலின் காரியதரிசிக்கு பயந்து வட்டியின் தீமைகளைக் கூட அவர் சொல்லமுடியாமல் வாழும் எத்தனையோ ஆலிம்கள் உள்ளனர்… நிர்வாகம் கோபப் பட்டுவிட்டால் பெட்டியைக் கட்டு என்று சொல்வார்கள்… பிள்ளை குட்டிகளுடன் வாழ்க்கையில் போராடப் பயந்த அவர்களின் இந்த இடைவெளியில் தான் இந்த ஆடம்பர அனாச்சாரங்கள் வேர்விட்டு விரிந்து பரவிவிட்டது என்றார்…

எனக்கான லைன் கட்டாயிட்டுது….

என்ன செய்றது, உண்மை அது தானே….

நாம் தான் உணரனும். பந்தலில் கட்டப்பட்ட துணிகள் எல்லாம் பாழும் ஏழைகளின் உடுதுணிகள், பலாச்சோற்றில் இடப்படும் உப்பு அந்தக் குமர்களின் கண்ணீரின் கரிப்புகள், இறைச்சியின் ஒவ்வொரு துண்டங்களும் பஸ்பமாய் அவர்தம் அடிவயிற்று நெருப்பின் சுவாலையில் வெந்ததென்று… நாம் உணரும் நாள் நம் அருகில் வருமா….

 

எங்களின் வாப்பா…

வாப்பான்னு நான் கூப்பிட்டா என்னம்மா ன்னு கேட்டு எனக்கு வேண்டியதை அது என்னவாகிலும் நான் அனுபவிக்க தந்து அதப்பாத்து சந்தோசப்பட என்னைப் பெற்ற என் வாப்பா என் கிட்ட இப்ப இல்லை…

க லு மு அஹமது முகைதீன் ஆலிம் சாகிபுவின் மகன் க லு அ ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் சாகிபு எனும் பெயர்கொண்ட என் அன்புத்தந்தை வபாத்தாயி சில வருஷங்கள் ஆகிட்டுது….

என் தந்தை எங்களோடு வாழ்ந்து என்னில் நிகழ்த்திய வாழ்க்கை பாடம் அதன் தாக்கம் கொஞ்சம் ஆழமானது அதே நேரம் அதிசயமும் வாய்ந்தது…அந்த அளவுக்கு நான் என் மகனிடம் ஊடுருவியிருப்பேனான்னு பாத்தா நிச்சயம் இல்லை.வாப்பாவின் நாடுகடந்த பயணங்களிடைப்பட்ட இரண்டிரண்டு ஆண்டுகளை ஊரிலும் மலேசியாவிலுமாக மாறி மாறி தனது ஆயுளை எங்களோடு கழித்தார்கள்.

என் தந்தையின் திடகாத்திரமான காலங்களில் அவர்கள் எங்களோடு கழித்த மணித்துளிகள் மிகக் குறைவு…அவர்களை நாங்கள் சந்திக்கும் நேரமும் அரிது. அந்த சொற்ப நேரங்களில் எங்களோடு அவர்கள் தனது பாசத்தை பகிர்ந்து கொள்வார்கள்.

உம்மா அடிக்கடி சொல்லும் உங்களுக்கு என்ன தெரியும் பள்ளியாசலும் மதரசாவும் தான் எப்பவும். இங்கே வீட்டில் நடக்குறத பத்தி எதுவுமே தெரியாது….

உண்மை தான் வீட்டில் நடந்த கல்யாணம் வெத்தில பாக்கு போன்ற விசேசங்களில் சமந்தார உறவுகள் அனைவரையும் அறிமுகம் செய்து உறவுகளை அவர்களுக்குச் சொல்ல வேண்டும் அப்படியும் அவர்களுக்கு அந்த உறவுகளைப் பற்றிய அறிந்து கொள்ளும் ஈர்ப்பு இயல்பாக இருந்ததில்லை. எல்லாம் வீட்டில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று தனது வழக்கமான அன்றாட அமலில் அக்கறை காட்டுவார்கள்..

காலை நான்கரை மணிக்கு எழுந்து ஊரின் மேற்குக் கோடியில் இருக்கும் மதரசா உள்ளடக்கிய ஒரு பள்ளியில் தொழுகை நடத்தி அங்குள்ள மதரசாவில் பயிலும் மாணவர்களுடன் கற்பித்தலில் கழித்து இரவு வேளை எட்டு மணி எட்டரைக்குத் தான் வீடு வருவார்கள்…

எங்களுக்கு வாப்பாவ பார்ப்பதென்பது வியாழன் மற்றும் வெள்ளி களிலும் பின்னர் நாங்கள் மதரசா சென்று ஓதத் துவங்கிய நாளில் அங்கு அந்தப் பாட சாலையிலும் தான் அவர்களை கண்ணுறுவோம்…

பெரியசர்த்து, ரஹ்மத்துல்லா அசர்த்து ன்னு தான் மேல் விலாசம் அவங்களுக்கு. எங்காவது வெளியூர் போனால் அங்குள்ள பள்ளியில் தொழுதால் தொழுகை முடிஞ்சு சந்திக்கும் அந்தப் பள்ளி பேஷ் இமாம் யாராவது ஒருத்தர் கிட்ட பேசிக்கிட்டிருக்கும் போது எந்த ஊருன்னு கேப்பாங்க நான் கடயநல்லூருன்னு சொன்னா அங்க நீங்க எந்த தெரும்பாங்க….உடனே உங்களுக்கு கடையநல்லூரை தெரியுமான்னு கேட்டா ஆமா நான் அங்க தான் ஹிப்சு முடிச்சேன்… அல்லது ஸும்ரா பாடம் ஒதினேம்பாங்க…அங்க ரஹ்மத்துல்லாஹ் அசர்த்து தெரியுமான்னு கேட்டா தெரியும்ன்னு சொல்லிட்டு நான் அவங்க கிட்ட தான் குர் ஆன மனனம் செஞ்சேன்னு சொல்வாங்க. நான் அவர்களின் மகன்னு சொன்னா ரொம்ப மகிழ்ச்சியோடு வாங்கன்னு சொல்லி தனது அன்பை காட்ட முயற்சிப்பாங்க..

என் தந்தைக்கு நாங்கள் எட்டு மக்கள் தவிர அவர்களிடம் கல்வி கற்ற அனைத்து மாணவர்களும் அவர்களை தனது தந்தையாக நேசித்தார்கள் அது போல வாப்பாவின் பெரும்பாலான ஆயுளும் கற்பித்தலிலும் கல்பள்ளியிலும் குர்ஆனோடு மனனம் செய்ய மண்டியிட்டமர்ந்து பாடம் பயிலும் மாணவர்களோடு கழியும்…

ஒரு ரண்டு வருசத்துக்கு முந்தி நான் திருநெல் வேலி டவுனுக்கு ஒரு விசயமாக போயிட்டு தொழுகைக்காக அசர் வக்தில் டவுன் பள்ளியில் தொழுதேன். தொழுது முடிஞ்சு நான் புறப்பட எத்தனிக்கையில் ஒரு நடுத்தர வயசு தாடியுடன் கூடிய நல்ல தேஜசான முகப் பொலிவோடு ஒருவர் சலாம் சொன்னார்…

வ அலைக்குமுஸ் சலாம் .

நீங்க….ன்னு இழுத்தார் எங்கேயோ பாத்த மாதிர்யும் இருக்கு ஆனா என்னால ஒரு முடிவுக்கு வர முடியலைன்னு சொன்னவருக்கு அருகில் அவரது கோஷா அணிந்த மனைவியும் மகனும்…

கொஞ்சம் அவசரத்திலும் கிளம்பும் மூடிலும் இருந்த நான் பறக்க முற்பட

நீங்கள எந்த ஊரு ஆரம்பித்து என் தந்தையைக் கேட்ட மாத்திரம் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் எனது கைகளை தனது கைகளில் எடுத்துக்கொண்டார்

வாப்பா.. வினாவுடன் என்னை உற்று நோக்கினார்.

நான் வாப்பா இரண்டாயிரத்தஞ்சில் தவறிட்டாங்க என்றேன்.

கைகளின் பிடி இறுகியது. அவர் உள்ளங்கையில் சூடு என் கல்பு தொட அவரின் நிலை குலைதலின் காட்சியும் எனக்கு என் தந்தையின் இல்லாமையும் சேர்ந்து அவரின் முகம் காண்கையில் என்கண்ணிலும் நீர் துளிர்த்திட..

என்னை ஆரத்தழுவிய அவர் கண்களில் கண்ணீர் பெருக்கிட எங்க அசர்த்து…

எனக்கு அப்ப தான் விளங்கியது.. எனது ஒரு சகோதரன் தனது தந்தையின் இழப்பின் பிரிவை என்னிடம் பகிரும் அந்த நிகழ்வின் வீரியம்.

குலுங்கி அழுத அவரை அவரது மனைவி வண்டிக்குப் போவோமே எனச்சொல்ல தனது துண்டால் முகத்தை துடைத்த அந்த சகோதரன் மூக்கை சிந்தியவாறு தனது காரை நோக்கி நடக்கையில் என் கைகளை இறுகப் பற்றியவராக அவரது சுமோக் காரை காட்டி…

இது என் கார். நான் ஹாபீஸ் ஆலிம் முடித்து கொஞ்ச நாள் இமாமத் செய்து விட்டு இப்ப ரியல் எஸ்டேட் பிசினஸ் பன்றேன் இங்கே டவுனில் தான் இப்ப வாசம்… என்றவர் என்னை அன்று தனது இல்லத்துக்கு அழைத்துச்சென்று எனது தாய் மனைவி மக்கள் மற்றும் என் சகோதரிகள் பெயரை குறிப்பிட்டு அனைவர் பற்றி விசாரித்தார்… எனது ஒவ்வொரு வக்து தொழுகையிலும் எங்களின் பாசமிக்க உஸ்தாதுகளுக்காக நான் பிரார்த்தனை செய்ய தவறவே இல்லை என்றவர் தொடர்ந்தார்.

என் மகனுக்கு அவன் முன்பு நான் இன்று வாழ்ந்து காட்டும் என் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவும் என் பால்ய கால உஸ்தாதுகளை உள்வாங்கியதன் பிரதிபலிப்பு தான் என்றார்.

நாங்கள் ஓதும போது அசர்த்து சாப்பிட்டு விட்டு எங்களுக்காக மீதி வச்சு எங்களையும் சாப்பிட சொல்வார்கள். அப்ப வீடுகளில் இருந்து வரும் உணவுகள் தான் எங்களுக்கு சாப்பாடு ஆனாலும் நாங்கள் எடுத்துவரும் அசர்த்து வீட்டு சாப்பாட்டில் தானே முழுதும் சாப்பிட்டு விடாமல் எங்களுக்கும் தருவார்கள். சில நேரம் மறைவாக காசு கொடுப்பார்கள். கிராமங்களில் பசியோடு வாழ்ந்த எங்களை அசர்த்துகளை நம்பி எங்களின் தாய் தந்தையர் விட்டு விட்டுச் சென்றாலும் எங்களின் அனைத்து தேவைகளும் பெரியசர்த்துக்கு கண்காணிப்பில் இருந்து நாங்கள் கல்வியும் ஒழுக்கமும் கற்க முடிந்தது….

எங்களின் தாய் தகப்பனிடம் நாங்கள் இருந்த காலத்தை விட அந்த உஸ்தாது மார்களின் அரவணைப்பே பெரும்பான்மையாக இருந்தது…

கிளம்புகையில் நான் அவரது குழந்தை கையில் கொஞ்சம் பணத்தை திணித்து விட்டு கிளம்பினேன்.. நிறைய அண்ணன்மார் எனக்கு இந்தப் பாரில் எல்லா இடங்களிலும் விரவி தங்களின் கைப்படம் மலர்த்தி என் அன்புத் தந்தைக்கு தனது ஒவ்வொரு பிரார்த்தனையிலும் துஆ செய்கிறார்கள் எனும் அந்த நினைவுகளுடன்….

உம்மா அடிக்கடி சொல்லும் உங்களுக்கு என்ன தெரியும் பள்ளியாசலும் மதரசாவும் தான் எப்பவும். இங்கே வீட்டுல நடக்குறத பத்தி எதுவுமே தெரியாது….

ஆமா உம்மாக்குத் தெரியுமா வாப்பாவின் குடும்பம் பெரியது அவர்களைத் தனது உயிர்போல மதித்து தந்தையாகக் கருதிக் கொண்டாடும் அவர்களின் மாணவர்கள் எனும் மகன்களின்  எண்ணிக்கை வாப்பாவுக்கே சரியாகக் கணக்கிட முடியாது என்று…

 

நமது அசரத்மார்கள்

இங்கே பின்னால் வரும் கொட்டேசன்களை கொஞ்சம் பாருங்க அதன் சுட்டிகளை சொடுக்கி அவற்றின் முழுப் படிமத்தையும் கண்டு அலறும முன்னாடி எல்லா கொட்டேசனும் நான் காப்பி பேஸ்ட் பண்ணது தான் அதை நான் எழுதல நம்ம மார்க்கப் பற்றுள்ள இஸ்லாமிய நெஞ்சங்களின் எழுத்து தான்… அதைப்பற்றிய நமது கண்ணோட்டம் அதன் பின் எழுதப்பட்டுள்ளது.

சரி ஓக்கே! உன் தலைவன் மல்லியப்பூ மன்மதன் பாக்கர் உம்ரா செய்து கொண்டு இருக்கும் போது குர்ஷித் பானுவுக்கு போன் செய்து கனியக் கனியக் கடலை போட்ட விசயத்தைப் பத்தி நான் இன்னிக்கு வரைக்கும் உன்னிடம் கேட்டு இருக்கேனா?

ஏன்டா இப்படி வாயக்கொடுத்து கேவலப்படுற!

http://poyyantj.blogspot.com/2011/12/blog-post_23.html

அண்ணனுக்கும் ஒரு பெண்ணுக்கும் உள்ள தொடர்பு அவரது இ  மெயில்  மூலம்  அம்பலம் ஆகியுள்ளது! கதிஜா மற்றும் குப்ரா எனும் இமெயில் முகவரிக்கு அண்ணன் அனுப்பிய மெயில் அவர் அண்ணனுக்கு அனுப்பிய காதல் கடிதங்கள் போன்றவை வெளியாகி உள்ளன. அனைத்தும் அண்ணனின் pjtntj@gmail எனும் மெயில் வழியே நடந்துள்ளன! இது அவரின் இ.மெயில் முகவரி என்பது அனைவருக்கும் தெரியும்! தனக்கு பிடிக்காதவர்கள் இமெயில் அனுப்பினால் எச்சரிக்கை மெயில் அனுப்புவார் அண்ணன் என்பதற்கு நேற்று முன் தினம் கடைய நல்லூர் சகோதரருக்கு அனுப்பிய மெயில் மற்றும் கொள்கை சகோதரரின் விமர்சனம்  எனும் இமெயில் ஆகியவை  உதாரணம். ஆனால் இந்த இ மெயில் பார்க்கும் பொது பல வருடமாக அந்தப் பெண்ணுக்கும் அவருக்கும் தொடர்புள்ளதாக அந்த மெயில் களில் இருந்த தெரிய வருகிறது ! அவை உங்கள் பார்வைக்கு….

பீஜே அசரத் பற்றி

http://webcache.googleusercontent.com/search?q=cache:http://www.sengiskhanonline.com/2011/11/blog-post_8943.html&safe=active

எப்படியடா என் பொண்டாட்டியை பாக்கர் தள்ளிக்கிட்டு போனான்னு சொல்லப்போச்சி? வந்து நிருபிச்சிக் காட்டுடா உண்மையா இல்லையான்னு பாத்திடலாம் என பொங்கி எழ வேண்டும். ஆனால் அண்ணன் மீது கூறிய புகாரை நிருபிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கும் செங்கிஸ்கானின் நிலை இதே நிலையைத்தான் ஒத்து இருக்கிறது. அதற்காக நீங்கள் செங்கிஸ்கான் பொண்டாட்டியை பாக்கர் காரில் ஊட்டிக்கு அழைத்து சென்றது உண்மையா என்று கேட்டுவிடக்கூடாது. இதுபோலத்தான் செங்கிஸ்கானின் நிலை உள்ளது என்பதை நாம் இங்கே சுட்டிக் காட்டுகின்றோம். நேரடியாக விவாதக் களத்திற்கு வர வேண்டும் அண்ணன் மீது சுமத்தப்பட்ட அவதூறை நிருபிக்க வேண்டும். அப்படி நிருபித்தால் அண்ணனை தலைவர் பதவியில் இருந்து அடுத்த நிமிடம் தூக்கி எறிய ததஜ தயார். எப்படி தெரியுமா?

பொம்பளைப் பொருக்கி பொதுச்செயலாளராக இருந்தாலும் அவரைப் பொட்டியைக் கட்டி அனுப்பியது ததஜ என்பதை செங்கிஸ்கான் உணரும் நாள் எப்போது?

http://www.facebook.com/photo.php?fbid=254274924637635&set=a.149405891791206.33766.100001653871973&type=1&theater

 கடிதத்தை தமிழில் படிக்க நிறைய சகோதரர்கள் கேட்டுக்கொண்டதாலும்நமக்கு வேறு வேலையே இல்லாததாலும் இதை மெனக்கெட்டு தமிழாக்கம் செய்து தந்திருக்கிறோம்.

செத்துடலாம்னு இருக்கு,,,, இப்படியெல்லாம் ஒரு வாழ்க்கை எனக்கு தேவையான்னு இருக்கு,,,,,, கொஞ்ச நாள் நல்லா பேசுறீங்கன்னு சந்தோஷமா பேசினால் அப்படியே கொஞ்ச நாளில் என் மனசை உடைச்சி உடைச்சி உடைக்கிறீங்க,,,யார் என மனசை நோகடிச்சாலும் என் மனசு அவ்வளவா வலிக்கல,,j,,(ஜவாஹிருல்லாவா இருக்குமோ) ஆனால் நீங்க என் மனசை உடைக்கும் போது என் மனசு ரொம்ப வலிக்குது,,j,,வளருன்கிறேன் வளருன்கிறேன்னு சொல்றீங்களே,, j,,,,2004 ல் இருந்து 2011 இன்று நள் வரை உங்க இமேஜ் என் வலராலால் எவ்வளவு கேட்டிருக்கும்,, நீங்க உங்க அறிவு கொண்டு யோசிங்க,,ஜெ,,, உங்ககிட்டதான் தைரியமா பேசுவேன்,வளருவேன்,,வேறு யாரிடமும் நான் அப்படி வளர மாட்டேன்,,,,, என் சொந்த வீட்டார்களிடமும் சரி மற்றவர்களிடமும் சரி அல்லாஹ்மீது ஆணை வளருவதில்லை,,,,அன் அனுபு உங்களுக்கு எப்பவும் புரியப்போவதில்லை,, ஒரு வேளை நான் செத்துட்ட பிறகு என் அன்பு உங்களுக்கு புரிய வரும்,,,, என் வாழ்க்கையில் நான் நிறைய சந்தித்தது,கஷ்டம்,துக்கம்,வேதனை,ஏமாற்றம்,,,நீங்க எப்போ எனக்கு கிடைச்சீங்களோ அப்போதிலிருந்து எனக்கு என,, j,,,,,,,,,,,,உங்க இமேஞ் பற்றி இன்று இல்லை எப்பவுமே பயப்படாதீங்க,,j,,,,,,,,,,,,,,,,,,உங்க அன்பு,உங்க **னி ,,எதுவும் வேண்டாம்,, j,,,,,,,,,,,உங்க அறிவு,அது மட்டும் போதும்,,,,,,,,,,,,,,நீங்க என்னை நேசிக்க வேண்டாம்,,,ஆனால் நான் உங்க மீது உயிரையே வச்சிருக்கேன்,,உங்களை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்,,உன் உயிரையே உங்களுக்கு கொடுப்பேன்,,,,பதிலுக்கு உங்க அன்பையோ,,**னியையோ கேட்கமாட்டேன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,பயப்படவே வேண்டாம் உங்க இமேஜ் பற்றி,,,,,,,,,,,,,,எனக்கு வாழ்க்கையில் நிம்மதி,சந்தோசம் இல்லை,,, அட்லீஸ்ட் என் சாவாவது எனக்கு நிம்மதி தருதான்னு பார்பேன்.

சரி. கடிதமெல்லாம் போட்டாச்சி. ஆனா இவ்வளவு வேலை பார்த்த அயோக்கியப்பயலுக ஒரு எவிடன்ஸ அவிங்களுக்கே தெரியாம விட்டுட்டானுங்க. அடுத்தமுறை கடிதம் வெளியிடும் போதாவது இந்தப் பிழை நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அது என்னன்னா ஒவ்வொரு கடிதத்துக்கு கீழேயும் ஒரு அரபி வாசகம் இருக்குது பாத்தீங்களா? அதுல என்ன எழுதியிருக்குன்னா

السلام عليكم من زين العابدين

அஸ்ஸலாமு அலைக்குமுன் ஜைனுல் ஆபிதீன் அப்டின்னு இருக்கு. இந்த வாசகம் பீஜே அனுப்புற மெயில்ல மட்டும் தான் இருக்கும்.

பீஜேவுக்கு வர்ர மெயில்லயும் எப்படி அஸ்ஸலாமு அலைக்குமுன் ஜைனுல் ஆபிதீன்னு இருக்கு!

ஏன்டா ! கூறுகெட்ட கொங்கா பயலுகளா, அறிவுகெட்ட மடப்பயலுகளா! செய்றத தெளிவா செய்றது இல்லையா? குப்ரா என்ற பெண் பீஜேவுக்கு அனுப்பிய ஈமெயிலில் எப்படியடாசலாமுடன் ஜைனுல் ஆபீதீன் அப்டின்னு முடியும்னு யாராவது கேள்வி கேட்டா என்னடா பன்னுவீங்க? ஹோமோ செக்ஸ் மன்னன் செங்கிஸ்கான் இதையெல்லாம் சிந்தித்து செய்யக்கூடாதா? அதனால்தான் சொல்றது கொஞ்சமாவது அரபி தெரியனும்னு.

அரபி மதரஸா ஆசிரியையின் தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருந்த காத்தாடி நைட்டு ஒரு மணிக்கு ஒர்க் ஆகலைங்கிற தகவல் பாக்கருக்கு எப்படி கெடச்சதுன்னு யாராவது கேட்டா என்னடா சொல்வீங்க?

அதே அரபி மதரஸா ஆசிரியையை அனுப்பி பஞ்சுமிட்டாய் கலர்ல 6 ஆயிரம் ரூபாய்க்கு பளபளக்கும் பட்டுப் புடவை எடுத்துக் கொடுத்துட்டு குளுகுளு பஸ்ல விடிய விடிய சரச சல்லாப லீலைகள் செஞ்சது எப்படின்னு கேட்டா அதுக்கு என்னடா சொல்வீங்க?

களியக்காவிளை குர்சித் பானுவை தனிமையில் சந்திக்கச் சென்ற தேசியத்தலைவருக்கு சித்திக்கும் செங்கிஸ்கானும் விளக்குப்புடிச்சி நின்னீங்களே அதுஏன்னு கேட்டா என்னடா சொல்வீங்க?

நான் ஏற்கனவே சொன்னேன் இன்னும் கொஞ்சம் அறிவைப்பயன்படுத்தி அண்ணனை இழிவுபடுத்தப் பாருங்கடா மாமா பயல்களா!

http://sengisonline.blogspot.com/2011/12/blog-post_15.html

அன்பான வாசகர்களே

என்னை முதலில் மன்னியுங்கள்

இது போன்ற ஒரு கட்டிங்குகளை சேகரித்து நமது உயிரினும் மேலான இஸ்லாத்தின் கொள்கையை நமக்கு விளக்கி நம்மை நெறி பிறழாமல் காக்க வந்த தாயிகளைப் பற்றி உங்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி விளக்கத்தான் இந்த மேற்குறிப்பிட்ட அனைத்து செய்திகளும்.

இங்கே அண்ணன் என்ற வாசகத்தால் குறிப்பிடப்பட்ட மனிதர் அன்புக்குரிய பீ ஜெயினுலாப்தீன் அசரத் அவர்கள். பாக்கர் என்பார் பீஜே அவர்களின் அன்புக்கும் ஏகோபித்த தவ்ஹீத் ஜமாஅத் சார்ந்த அன்பர்களின் அன்புக்கும் பாத்திரமாயிருந்து பினனர் தன்னை அந்த டீஎன்டீஜெ யிலிருந்து தற்போது விடுவித்துக் கொண்டவர்.

இப்போது நாம் இந்த தலைப்புக்கு வரவேண்டும், அசரத்மார்கள் எனும் தலைப்பில் என் அறிவுக்கொப்ப நான் கண்ட அந்த மனிதர்கள், மேற்குறிப்பிடப்பட்ட இவர்களைப் போல வாழ்ந்தவர்கள் அல்லர்.

நான் அசரத்மார்களை எனது பால்யம் தொட்டு அவர்களின் ஒவ்வொரு செயல்களையும் உண்ணுவதை, உறங்குவதை, ஒய்வுநேரங்களில் தனது ஓய்வை அவர்கள் எவ்விதம் பிற செயல்களால் ஈடு செய்கிறார்கள்,என்பதை அவர்களின் மனைவிமக்களிடம் அன்புசெலுத்துவதும் இல்லற(இவ்வுலக)வாழ்வில் இன்பம் சேர இஸ்லாமிய நெறியில் வாழ்க்கை நடத்தியதை, இமாமத் செய்வதை, மதரசாவில் மாணாக்கர்களை பயிற்றுவிப்பதை, சொற்பொழிவுக்கு செய்தி சேகரிப்பதை, சொர்பொழிவாற்றுவதை, சொற்பொழிவில் அவர்களின் வரம்புகளுக்குட்பட்ட வாழ்க்கை நியதிகளைக் கொண்ட செய்திகளை பரப்பியதை, அவர்கள் கலந்துகொண்ட பாத்திஹா மவ்லீதுகளை,  சமூகத்தின் அந்தஸ்துக்குப் பொருத்தமான மனிதராக அவர்கள் இருந்ததை அவர்களின் மார்க்கப்பற்றுக்கு அந்த சமூகம் கொடுத்த கண்ணியத்தை, ஒரு பேரனாக, மகனாக,  மாணவனாக கண்டு

அவர்களின் கைவிரல் சுட்டிய நெறியில் இஸ்லாத்தோடு ஒழுகிய எனக்கு, தாயிகள் எனும் போர்வையில் கடந்த இருபது ஆண்டுகள் நம்முடன் ஏகத்துவ உபன்யாசம் மற்றும் இஸ்லாமிய நெறி காட்டுதலில் தன்னை முழுமையாக ஈடு படுத்திய இந்த சில ஆலிம் பெருமக்களைப் பற்றிய ஒருவர் மீதான மற்றவரின் விமர்சனங்கள் பற்றி எண்ணுகையில் நான் தாங்கமுடியாத சோகத்துக்கு தள்ளப் படுகிறேன்…..சிரசு சூடாகி நாசித் துவாரத்தில் குருதி கசியுமோ என எண்ணத் தலைப்படும் அளவுக்கு வேதனையும் வெறுப்பும் ஒரு சேர உண்டாகி விடை தெரியாமல் உழல்கிறேன்….

இஸ்லாத்தின் நெறிகள் இன்று நேற்று நமக்கென உருவாக்கப் பட்டவை அல்ல..நெடுங்காலமாக அது அண்ணல நபிகள் நமக்கு இறைவனிடமிருந்து பெற்றுத்தந்த குர் ஆன் மற்றும் அண்ணலெம் பெருமானார் (ஸல்௦) அவர்களின் சொல் செயல் அசைவுகள் உள்ளிட்ட அனைத்தும் உள்ளடக்கிய ஹதீதுகள் வழியாக நமது அன்றாட வாழ்வில் சில பல சம்பிரதாய மற்றும் காலங்காலமாக பின்பற்றும் பழக்க வழக்க வழி செயல் நடவடிக்கைகள் (உரூஸ் கந்தூரி) ஆகியனவும் பின்னர் அவற்றை நமக்கு சொற்பொழிவுகளாலும் போதனைகள்  கலந்த அறிவூடளாலும் இஸ்லாத்தில் வாழ்ந்து அந்த நெறியில் நமக்கு ஆகுமான சரியெனப்படும் தர்ம வழியில் இது வரை கழிக்கிறோம்….

மொத்தத்தில் சமூகத்தில் ஆலிம் பெருமக்கள் தங்களது நடை உடை செயல்களால் நம்மிடம் அந்தஸ்தைப் பெற்றனர். நிறையப் பேர்களை அதற்கு நாம் இன்றும் உதாரணம் காட்டலாம். அம மாதிரியான அம மக்கள் வாழ்ந்த அந்த இடத்தில் இன்று சில மௌலவிகளை நாம் வைத்து அவர்களை ஒப்பீடு செய்ய கொஞ்சம் தயக்கம் கொள்கிறது மனசு. உண்மையாகச்சொல்லப் போனால் இஸ்லாமியக் கோட்பாடுகளில் உள்ள சில ஓட்டைகள் கந்தூரி பாத்திஹா வரதட்சணை சீர் சீராட்டுக்கள் ஹதீதுகளில் நபி செய்துள்ள செயல் வடிவிலான வேறுபட்ட அறிவிப்புகள் மத்கபுகளின் பிரிவினை போன்ற இத்யாதி காரணங்கள் கொண்டு சர்ச்சைகள் இதுவரை மேற்கொள்ளப் பட்டு அதன் வழியாக இளைஞர் சமுதாயத்தினரின் அமோக ஆதரவால் சில ஆலிம்கள் தங்களை மெருகேற்றிக் கொண்டனர் அப்படி மெருகேறிய ஆலிம்களில் சிலரின் நடவடிக்கைகள் பற்றிய இணைய வழி செய்திகள் தான் மேலே நான் கோடிட்டுக் காட்டியவை…

சமீபத்தில் நான் ஒரு கவிதை ஒன்று படித்தேன் ஒருவர் வேதனையுடன் இஸ்லாமியனின் வணக்க வழிபாடான தொழுகை பற்றிய ஆலிம்களின் நிலையை அழகாகச்சொல்கிறார்….

ஆட்டம்

விரலை ..

நீட்டிக்கிட்டு தொழுவனுமா ?
நீட்டாமலே தொழுவனுமா ?

ஆட்டிக்கிட்டு தொழுவனுமா ?
ஆட்டாமலே தொழுவனுமா ?

ஆட்டம் … ..
முடிஞ்சுபோகும் முன்னாலே
முதலில் சொல்லுங்க

அப்புறம் ..
ஆட்டவே முடியாதபோது
பெரிய தொல்லைங்க.

கேட்டாலும் கேட்டீக ..
கேள்விகளை போட்டீக ..

வீட்டையுமே ரெண்டாக்கி
நாட்டையுமே ரெண்டாக்கி

போட்டியாக எங்களையும்
புறப்படத்தான் வச்சீக ..

இறப்பு ..
எப்ப வரும் ?
எங்கே வரும் ?
ஒண்ணும் தெரியலே !

எப்ப உங்க
விவாதம் தீரும் ?
எதுவும் புரியலே !

நமக்கு தொழுகை
நடக்கும் முன்னே
நாம தொழுவணும்

நாயனுக்கு நன்றியினை
நாளும் கூறணும்

எனச்சொல்லும் அந்த வேதனை உட்கொண்டு வலியுடன் நெஞ்சில் அறையும் வரிகள் மேலும் சொல்கிறது

தொழுபவனே
தொழ விடுங்க
அதுவே போதும்

அப்புறமா வச்சிக்குங்க
உங்க
விதண்டாவாதம்.

- அப்துல் கையூம்

என்னங்க தொழுகையில தொடங்கி இந்த சண்டை இப்ப பொம்பள விவகாரம் வரை அசிங்கமாப் போறப்போ…. அல்லாஹ் ன்னு கண்ண மூடி அண்டமெல்லாம் காக்கும் அந்த ரப்பைத் தான் துணைக்குக் கூப்பிட வேண்டியிருக்கு…

இந்த செய்திகளின் சாரம் உண்மையா பொய்யா என்பதைப்பற்றிய ஆராய்ச்சி இப்ப வேண்டாம் அல்லாஹ் ஒருவன் தான் மறைவானவற்றை அறிபவன். என்னைப் பொருத்தமட்டில் இம்மாதிரியான அசிங்கமான வட்டத்துக்குள் தாயிக்கள் வந்ததைத்தான் என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை….

கால் முட்டிக்கு மேல் தனது கைலியை உயர்த்தி பிறர் காண முடியாமல் எந்தநேரமும் வேத வரிகளை வாயில் ஓதிக்கொண்டு தனது மிச்ச நேரங்களையும் பள்ளிவாயில்களில் கழித்து தனது அன்பாலும் கற்ற கல்வியாலும் பேணிப் போற்றப்பட்ட ஆலிம் (என் தந்தை உட்பட) பெருமக்களே உங்களின் உன்னத பரிசுத்த இஸ்லாமிய வாழ்க்கையை இப்பொழுது நான் எண்ணி உங்களைப் போல நிறைய தாயிகள் கல்விமான்கள் சமூகத்திற்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்று இறைவனை கண்ணீரோடு வேண்டுவதோடு,

தனது உள்ளத்தால் பரிசுத்தம் இழந்து பரிதாபமான நிலையில் விமர்சனத்துக்காளாகி இன்றும் இஸ்லாத்தில் நம்முடன் வாழும் மவுலவிகள் தங்களின் செயல்களை அந்த நாயன் மீதான பயத்தால் இனிமேலாவது தங்களை  தூய்மையாக்கிக் கொண்டும் இஸ்லாத்தின் கடமைகளை கோட்பாடுகளின் அடிப்படையில் நம்மிடையே உள்ள சச்சரவுகளை மறந்து சமூக அவலங்களுக்காக மட்டும் குறிப்பாக நம்மில் காணப்படும் வரதட்சணை சீர் சீராட்டுக்கள் தேவையற்ற இஸ்லாம் குறிப்பிடாத விருந்து கேளிக்கைகள் ஆடம்பரங்கள் அவலம் தரும் சீர்கேடுகளில் இருந்தும் நம்மை காத்து நல்வழிகாட்ட ஒற்றுமையாய் இணைந்து தமது அர்ப்பணிப்பால்அவர்களின் சேவையைத் தொடரவும் வல்ல நாயன் அருள் புரிய வேண்டும் ….

முக்கியமாக இந்தக் கட்டுரையில் நான் யாரையும் சாட வேண்டும் என எண்ணி சாட வில்லை யாரையும் போற்றி அவர்கள் காட்டிய வழியே சிறந்தது எனவும் வாதாட வில்லை…

அல்லாஹும்ம யாமுகல்லிபல் குலூப் என்பதன் படி உள்ளத்தை உற்று நோக்கும் அந்த நாயன் மீதான பயத்திலும் சமூகம் மேல் நான் கொண்ட அக்கறையிலும் ஒரு விழிப்புணர்ச்சிக்காக இங்கே பதிந்து உங்களின் மனசாட்சிக்கு முடிவுகளை விட்டு முடிக்கிறேன்.

 

வெத்தில பாக்கு, தாலிகெட்டு, பைக் ரைடு – பாரீன் கடையநல்லூர் -3

அன்னைக்கு கொஞ்சம் வெள்ளென காக்குழிய விட்டு எஞ்சு மேக்க போயி சேவிங் பண்ணி பவுடர்லாம் அடிச்சிட்டு “இருக்கதுல நல்ல சட்டைய அதாம்பா அந்த டிப்டாப் சட்டைய எடுத்து போட்டுக்கோ” உம்மா சொன்ன மாதிரி அப்பிடி ஒரு சோடிப்பு, எண்ணெய்யும் தண்ணியும் சேர்த்து மடங்குறாப்பல சீவி,

பாலும்பழமும் சேக்குன்னா பேமஸ் அத அழகா கொண்டு வாரத்துல என்ன அடிக்க முடியாது…எல்லாம் முடிஞ்சு மேல்றோட்டில் இப்ப பார்க் கடிகாரம் இருக்கைப்பா அது கிட்ட உம்மா சொன்ன மாதிரி நின்னேன்…

என்னை பாக்ககணுமின்னு எனக்கு பொண்ணும் பாகும் போது, ஐயாத்தெருவில பொண்ணுவூட்டுக் காரவ அந்தப் புள்ளைக்கட அண்ணன் சொன்னாராம்..யாருன்னு தெரியாது… நாம்போயி பத்து நிமிஷம் நின்னுட்டு வந்துட்டேன்…அந்தப் பொண்ணையே பேசி எனக்கு கலியாணம் முடிஞ்சாச்சு…

பேசிக் கெடக்கையில எங்க மதினி சொல்லுச்சு நான் ஊராணிக்கு அந்தப் புள்ள போவையில உனக்கு காட்டட்டான்னு?

நான் பயந்து நடுங்கிட்டேன் என்னா எங்க வாப்பக்கு தெரிஞ்சா என்ன கொன்னு குழியில வச்சிருவாறு. சமந்தாரங்களுக்கு தெரிஞ்சு அவங்க வாண்டாமின்னுருவாங்க மதினி நான் வரல…

கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முந்தி கல்யாணத்துக்கு கூப்பிட அவ்வ சாச்சி ஊட்டுக்கு போகையில என்ன வாங்கன்னு அங்க இருக்கச்சொல்லி சாயா குடிக்க சொன்னாக அப்ப உள்ள தடும் திடும்ன்னு சத்தம்….

அதைக்கூட கல்யாணம் கழிச்சு ரொம்ப நாளைக்குப் பெறவு எம் பொஞ்சாதி எங்கிட்ட சொன்னா… அன்னைக்கு தான் என்ன அவ முதல்ல பாத்ததாக… அது வரைக்கும் எனக்குத் தெரியாது…

வாப்பா – இருங்க எம்மவன் கூபிடுறான்

என்ன வாப்பா?

நான் கொஞ்சம் வெளியில போறேன் கொஞ்சம் லேட்டாவும்..நானும் அவளும் (மருமகள் பெயரைச் சொன்னான்)

சரி வாப்பா.

இவன் இப்ப லீவுல வந்திருக்கான் வர முந்தியே இவன் சேக்காளி ஒரு டக்க எங்கேயோ இருந்து வாங்கிட்டு வந்து சனிக்கிழமைலேருந்து இத சலீம் ஒட்டுவான்னு சொல்லி உட்டுட்டுப் போனான்.. அவன் வெள்ளிக்கிழமை வந்தான் மறுநாள்லேருந்து அதை எடுத்துப் புழங்கறான்,

வந்த நாள் தொட்டு மத்தியானம் அந்தப் புள்ளைய (மருமகள)வண்டியில ஏத்திக்கிட்டு இவன் எங்கயோ போயிட்டு ராத்திரிக்கு எட்டு எட்டரைக்கு தான் வருவான்..போன முறையும் இப்டித்தான்..

இவனுக்கு கல்யாண முடிச்சு என் மருமக ஊட்டுக்கு வந்து ரண்டரை வருசமாச்சு இவன் இங்க இருக்கையில அந்தப்புள்ள வரும் அவன் போன பிறகு ஊட்டுக்குப் போயிரும்… ஒரு பேரனும் இருக்கான். அவன் அவ்வோ பெதாட்டு நல்லாப்பா கூட ஒருக்கா மேல்றோட்டுக்கு வந்தப்ப பாத்தேன்.. என்கிட்டே வரமாட்டான். எனக்கு ஆளே தெரியாது என்னையும் அந்தப்புள்ளைக்குத் தெரியுமோ என்னமோ? அவ்வும்மாக்கே தெரியாதே…

ஹும்… இப்ப விசயத்துக்கு வாங்க நான் கல்யாணம் முடிச்சி ஒரு வாரங் கழிச்சு தான் எம் பொஞ்சாதிய முகம் பாத்து பயமில்லாம மனம் தொறந்தேன் அப்படி ஒரு மனுசப்பெறப்பப எனக்குன்னு இந்த துனியாவில அந்த ரப்புல் ஆலமீன் படச்சு அவளும் எங்கயோ பெறந்து எங்கயோ வளந்து என் இன்ப துன்பமெல்லாம் கூட நின்ன அவள கூச்சமில்லாம பாக்கதுக்கே எனக்கு கொறைய காலம் எடுத்தது… ஏன்னா உம்மா வையுமொன்னு பயம் வாப்பா பாத்திருமொன்னு ஒரு உறுத்தல் அதனால ஆறுமாசமாச்சு சகஜமா நாங்க பேசிக்கிட.. பைத்தியக்கார காலம் அது இல்லியா…

மனசு கொஞ்சம் அறுத்தது நான் மௌனம காத்தேன்..

எங்கங்க காலம் மாறிட்டு இப்ப , இவன் சேட்டை அதிகம். முன்ன மாதிரி எனக்கு பணம் அனுப்பறதில்லை. எங்கிட்ட என்ன எதுன்னு கேக்கறதில்லை இப்ப கொஞ்சம் மாசமா, மாசம் ஆயிரம் ரண்டாயிரமின்னு அவன் சேக்காளி வீட்டுல இருந்து தான் வருது. சாப்பாட்டுக்கு தவிர வேற செலவுக்கு அவண்ட்ட எப்பமாவுது போன்ல சொன்னா அனுப்புவான்..

நானும் அவன கைய கழுவிட்டேன் களவாணிப் பய.. எம் மருமவன் தெனம் போனில் பேசும்போது உடம்பக் கவனிச்சிக்கிடுங்க பணம் அனுப்பி உடவா? எவ்வளவு பணம் வேணுமின்னாலும் நீங்க கூசாம ஒங்க மவள்ட்ட கேளுங்கன்னு சொல்றாரு. அவரு யாரு அந்நியன்.. ஆனாலும் எனக்கு இப்ப எம் பொம்பளப் புள்ள தான் உதவி… காலையில் எந்திரிச்சா சாயாப் போட்டு தாறதில் இருந்து, என் மருந்து மாத்திரை எல்லாம் அந்தப் பிள்ளைக்குத் தான் அத்துப்படி…

ஒங்க மக அவ மாப்பளஊட்டுக்கு போவாதா ன்னு நான் கேட்டா, பதிலுக்கு அந்தப் புள்ளை சின்னப்பிள்ளை அதுக்கென்ன தெரியும் நண்டும் சிண்டுமா சின்னஞ் சிருசுவள வச்சிக்கிட்டு அங்கே போயி சீரழியவா…

எந்திரிச்சிட்டேன்

நெசமாத்தான் காலம் தல குப்புற மாறிட்டு…

இன்னும் கொஞ்சம் நாள்ல இப்ப வளர்ந்து வரும் பிள்ளைகள் நாளை தன குடும்பம் தனது தந்தை என்பதை கண்ணாடிச்சட்டமிட்ட பிரேமுக்குள் தான் காண்பர்…

உடலும் உயிருமான உறவுகள் தலைக்கட்டுகள் குடும்பப் பெயர் கொண்டு தளைத்த கிளைகள் தான்யார் தனது மூத்தையர் யார் என்நும் இவை மூலைக்குள் தள்ளி முழு விளக்குமாத்தால் அள்ளி சாக்கடையில் போடபபடும்…

வாப்பா கண் காணாத தொலைவில்

உம்மா கண் முழுவதும் காணொளியில்

அண்ணன் அல்லது தம்பி கையில் புகையுடன் நெஞ்சில் ஏதாவது உயிருள்ள அல்லது மரித்த காதலடுனும் கல்பு வளைகுடா ஆசையுடனும் மோட்டார் சைக்கிளில் அல்லது ஏதாவது சங்கத்தில்…

சகோதரி மணமுடித்தால் நம் வீட்டிலும் அல்லது வளைகுடாவில் மச்சானுடனும் மணமுடிக்காவிட்டால் பள்ளிக் கூடம் அல்லது அதென்ன நிஸ்வான் மதரசாவில்…

எத்தனை பள்ளிக் கூடம் வந்து எவ்வளவு ஆலிமாக்களும் பட்டப்படிப்பிலும் நம் பெண்மக்கள் ஜொலித்தாலும்…..

பணியாரம் முருக்கு ரொட்டிப் பெட்டி சுமப்பவர்களில் ஆலிமாக்களும் பொறியியல் மற்றும் பட்டம் படித்த நம் பிள்ளைகளும் தான்…

சிலநேரம் நம்ம முன்னால வைக்கப்பட்ட சாப்பாடு கல்யாண வீட்டுச் சாப்பாடு போல எங்கருந்து ன்னு கேட்டா அதனை சொல்ல திணறும் மனைவி எங்க வீட்டுல தந்தாக அவ்வொளுக்கு எங்க மாமியூட்டில் மாமி வூட்டுக்கு அவ்வ மருமகள் வகையில் …

தொடரும் சங்கிலி தெரியாத அற்றம் கண்ணி நோக்கி கடைசியில்…இந்த சாப்பாடு புறப்பட்ட இடம்….

நாம் திங்கத்தான் பொறந்தமா?

சாட்டையால அடிச்சமாதிரி என்னப் பாத்து நான் கேக்கறேன்...

அண்டாவ எறக்குவமா….

 
Leave a comment

Posted by on December 10, 2011 in மனசார...

 

கரை சேருமா? பாரீன் கடையநல்லூர் -2

எனக்கும் நாஞ்சில் நாடன் மாதிரி அவர் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் உணவுப்பழக்கங்கள் உடை கலாச்சாரம் திருமணங்கள் என பதிந்தது போல நான் சார்ந்த கடையநல்லூர் முஸ்லீம்களின் கலாச்சாரம் அன்றாட வாழ்வின் அருமைபெருமைகள் பற்றியும் சொல்லணும்னு ஆசை தான். ஆனால் அந்த வகையில் நான் கொஞ்சம் நெனச்சா என் நெஞ்சில் இருந்து கொஞ்சம் ரத்தமும் சொட்டுது அதுல நின்னு கொஞ்சம் நினைவுகள் நெருஞ்சி முள்ளாக் குத்துது….

நம்மூர்க்காரர் ஒருத்தரு அடிக்கடி கூப்பிடுவாரு போயிப் பாக்க கிளம்பினேன் வாங்கோ வாங்கோ

சுகநல விசாரிப்புகள் கடந்த பிறகு போன் மணியடிக்க

ஒரு நிமிஷம்!

பரிவுடன் அவர் என்னிடம் கேட்டார்.

பேசுங்க நான் வாறன்..

இல்ல இருங்க நான் பத்து நிமிஷம் தான்…

சரி

அவர்…கொஞ்சம் சத்தமாக மகனுடன் பேசி முடிச்சிட்டு ,

பாருங்க சார்வாள் இவன் இப்ப காலேஜு முடிச்சுட்டு இப்பந்தான் ஊருக்கு வந்து இந்த சங்கத்திலே கெடக்கான்…ஏதாவது ஒன்னச்சொல்லி நம்மள நிம்மதியா இருக்க உடமாட்டேங்கறான்…

புள்ளையன்னா அப்படித்தானங்க…

இல்லங்க இவன் இப்போ சேக்காளிமார்வொளுக்கு சாப்பாடு வைக்கணும் மூவாயிர்ரூவா வேணும்னு கேக்கான்…எம் பொஞ்சாதி அவஞ்சொல்றத தான் கேப்பா… எப்பிடியும் இந்த மாச செலவில மேக்கொண்டு மூவாயிரம் உண்ணாம தின்னாம தான் அழியப்போவுது…

உங்களுக்குத்தெரியுமாங்க முந்தி நாங்க சின்னப்பிள்ளையா இருக்கையில கல்யாண ஊட்ல சாப்பிடக் கூப்புட்டா அம்புடுப்பேரும் போவோம் அப்ப அந்த கல்யாண வூட்டுக் காரங்க வாசல்லயே நிறுத்தி, எப்பா நின்னுடே  நீ யாரு உங்க குடும்பம் என்ன குடும்பம்டே அப்படின்னு கேட்டுட்டு அப்படியே தன கூட இருக்கவங்கள்ட்ட கேப்பாரு’என்ன முறையில இவங்களுக்கு சாப்பாடு’ ஓ அப்படியா சர் சரி இப்ப மனசிலாயிடுச்சு நீ போடே! வழி திறக்கப்பட்டு வாய்க்கு ரண்டு பருக்கையும் அந்த கறியாணமும் கெடச்சுது…

அப்ப ஏதுங்க கரியாணமும் சோறும் இந்த இஞ்சிவெள்ளப்பூடு மணமே இங்க நாங்க வந்த பெறகு தான…இருபத்தஞ்சு வருஷ வளைகுடா வாசி வாய் திறந்து சொன்ன போது முள்ளு கொஞ்சம் லேசா குத்தி வலியுணர முடிஞ்சிது…

அன்னிக்கு நாம ஏத்துன அண்டாவ நாம ஏறக்கவே இல்லை… கல்யாணஊடு கத்த ஊடு மார்க்க ஊடு கெலகப்ரவேசம் ஏன் சமைஞ்ச ஊடு இப்ப போன மாசம் திடீருன்னு ஒரு செலவு நான் இங்க இக்காமா ரெடி பண்ண இன்சூரன்சு அது இதுன்னு மொத்தமா என் சம்பளமும் செலவழிஞ்சி செலவுக்கு கொஞ்சம் உங்கள மாறி ஆளக்க கிட்ட கைமாத்து வாங்குனேன். ஊட்ல சொல்லுச்சு சமந்தாரவோ ஹஜ்ஜிக்கு போறதால நாம் எதாவது செய்யனும்மின்னு….

அல்லாஹ்…

உங்களுக்கு தெரியுமா ஒரு கிப்ஸ் கைலி சட்டைத் துணி ஒரு சேலை முட்டாக்கு கொஞ்சம் சுவீட்டு காரச்சேவு மிச்சருன்னு, அவரு போவ முந்தி கைநனனைக்க ஊட்டில சமந்தாரவொளுக்கு கடாக்கறி எடுத்துஆக்கி அப்புறம் அவரு பயணம் கிளம்பும்போது வேனு காருன்னு எனக்கு எந்த ஹஜ்ஜிக்கும் நான் போவாமலே பதினஞ்சாயிரம் செலவு. எம்புள்ளை அங்க வாழனுமின்ணா நான் செஞ்சுசாகனும் இது கடையநல்லூர் முஸ்லீமின் கடமை… இது எந்த அபூ தாவூதுல முஸ்லிமில புகாரியில இருக்குன்னு தெரியல… சஹீஹானதா லயீபானதா சில்சிலா சரியா…

எல்லா ஜமாத்துக் காரங்களும் கேக்குறாங்க செய்யிறாங்க இத தின்னுகிட்டு இத செய்யலன்ன அவஞ் செஞ்சது தப்பு தானன்னு சொல்லிக்கிட்டு உயிரோட இஸ்லாத்துக்கு புது வடிவம் கொடுத்து… கொடுமை தம்பி.

சொன்னவரின் வாயிலிருந்து உதிர்ந்த இவை வார்த்தைகளல்ல வலிகள்..

எங்க வாப்பா தரவன்ட்ட செலவுக்கு காசு கேட்டாரு அப்ப சட்டங்கி பீசு வந்து செழிக்காத நேரம்.அவன் இல்லன்னுட்டான்..என்ன செஞ்சாரு நாலு கழி நூல எடுத்து இடுப்பில சொருவிக்கிட்டு தெரியாம மகரிபுத் தேரத்துக்குப் பிறகு வெளியே போயி நாலாம்பேருக்குத் தெரியாம ரண்டு ரூவாக் காசுக்கு வித்து அத வேங்கிட்டு வந்து மத்தியானமெ சாப்பிடாத எங்களுக்கு ஏதாவது வேங்க கடைக்கிப் போயி சோளான் வாங்கிட்டு வந்து சோளசோறு ஆக்கினா கருவுளி வேணுமின்னு கஞ்சியைக் கரைச்சு அன்னைக்கு நாங்க ராத்திரி குடிச்சோம்..கடைசிக் குவளைய எங்கவாப்பா என் தங்க வாப்பா குடிக்கையில அவரு கண்ணுல ஈரத்த நாம் பாத்தேன்.. அல்லாஹ் எங்க மக்களையாவது கஷ்டத்திலிருந்து காப்பாத்தப்ப்பான்னு இந்த காக்குழி இல்லை கசக்குழி இதுல இருந்து கறைஏத்தப்பன்னாரு…

கறை படிஞ்சி கலங்கி நிக்கிற கடையநல்லூர் முஸ்லீம் கேக்கறான் கறை சேருவோமா…

நேரம் கெடைக்கும் போது வேறயும் நெறைய சொல்றேன்…கொஞ்சம் அழனும் போல இருக்கு

 
Leave a comment

Posted by on December 10, 2011 in மனசார...

 

பாரீன் கடையநல்லூர்

வாழ்க்கையின் பலகட்டங்களை கடந்து, வாழ்வின் நிறங்களுக்கேற்ப நானும் நிறம் மாறி, ஒவ்வொரு இடமாக காற்றின் வயப்பட்ட காய்ந்த இலை சருகு போல கடைசியில் வளைகுடாவும் வந்து விட்டேன்…

இடையில் என் வாழ்க்கை முறை முழுவதும் அரேபியாவிலிருந்து நமது ஊருக்கு வரும் நண்பர்களை உறவினர்களை வரவேற்பதில் தான் எனது வாழ்வில் அரேபிய உடனான தொடர்பு இருந்தது…. ஆனால் இன்று நானும் ஒரு கல்பு வாசியாக எனது முப்பத்தி ஐந்தாம் ஆண்டில் நான் என்னை இங்கு பதிந்து கொண்டேன்…

வந்தபின்னர் தான் தெரிந்து கொண்டேன் இங்கு வாழும் நம் உறவுகள் குறிப்பாக தமிழ் பேசும் தமிழகம் சார்ந்த இஸ்லாமிய உறவுகள் ஒரு புதிய வடிவில் நான் கண்டிராத கேட்டிராத முற்றிலும் எனக்கு வியப்பைத்தரும் தோற்றத்தில் அவர்கள் தமது வாழ்க்கையை நடத்துகின்றனர் என்பதை…

அவர்களின் குடும்ப ரீதியிலான அணுகுமுறை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமும்
உறவுகளின் வரிசையில் தனது தந்தை வழியிலான தம்பி அண்ணன் போன்றவர்களை விட மனைவி வழியிலான மச்சான் மச்சினன் சகலை போன்றவர்களிடம் அவர்களுடனான நெருக்கமும்….. பெற்றோர்கள் தாய் தந்தைக்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமையை காட்டிலும் தனது மனைவியின் பெற்றோர்களைபெரிதும் பேணும் அந்த புதிய வடிவம்….

அவர்களின் சம்பாத்தியத்தில் அவர்கள் அதனை பங்கிட்டு தனது சொந்த உறவுகளுக்கு விநியோகிப்பதில் காட்டும் புதிய நடைமுறை என புதிய பாதையை பரிமாணத்தை இங்கு வந்து அதனை அவர்களின் கலச்சாரமாகிவிட்டதை கண்டேன்…

மார்க்க விசயத்தில் நம்மம்வர்கள் அதிலும் கடையநல்லூர் வாசிகளின் ஊடுருவல் ஒரு குறிப்பிட்ட புரட்சி ஜமாத்தை நல்லூரிலேயே தலைமை அலுவலகம் வைத்து அதன் தலைவரின் அனைத்து இயக்கத் தொடர்புகளும் நல்லூர் வாசிகளின் கண்காணிப்பில் இருக்கும் படியாக நல்லூர் வாசியின் கருமானியப்பட்ட காசும் பணமும் அந்த இயக்கத்தில் வளர்ச்சியில் முக்கியமானதாக பங்கேடுப்பதை காண முடிந்தது…

இதில் அதிசயமாக அவர்களின் அந்த மார்க்க விசயத்திலான பணப் பங்களிப்பில் வென்றெடுத்த இடம் மற்றும் அதன் வழி பள்ளிவாசல், அந்த தலைவரின் நாளொரு மேனியாக தனது அறையில் அறைகூவலில் உறைந்த அவா சொற்பொழிவுகள், கேள்விப் பதில்கள், வசூல்கள் ஆகியன இன்று கொஞ்சம் ஒன்றுக்கொன்று இடைவெளி அதிகரிக்க ஒய்வு எடுக்கும் கணமாகி…இப்ப யாரு நல்லவன்னு தெரியல்லியே டைம் ஆகிவிட்டது…

போகட்டும் விடுங்க நான் சொல்ல வாறது என்னன்னா நம்மூரு இப்ப வேற மாதிரி ஒரு தோற்றத்தில் அதாவது அடுத்த தெருவுக்கும் ஆட்டோவில் பயணிக்கும் நிலைக்கு வந்தாச்சு…முந்தி நமக்குன்னு இருந்த எந்த தொழிலும் இப்ப நம்ம கையில் இல்லை..இங்கே ஒரு ஹார்டுவேர் கடையில் அம்பது கிலோ சிமெண்டு மூடையை தோளில் சுமந்து கொண்டு சென்று பார்க்கும் பணியை ஊரில் நாம் செய்யமுடியாத சூழல் அதற்கு காரணம் தேவையில்லை…

கிளீனிங்கு டிரைவிங் கடை வேலை இவை தவிர கொஞ்சம் அலுவலகத்தினுள் அமர்ந்து பார்க்கும் பணிகள் ஆபீஸ் பாய் போன்றவை எல்லாம் இப்ப சந்தேகத்தில் ஓடிக்கிட்டிருக்கு…
சமீபத்தில் இந்த கல்பு தேசத்தின் வெளிநாட்டு வேலை நாடுவோர் மற்றும் பணியாளர் சம்பந்தமான செய்திகள் அவ்வளவு சுகமானதாக இல்லை… அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் .
இந்நிலையில் நம்ம சந்ததிகளை விடுங்க நமக்கு எதிர்காலத்தில் எவ்விதம் நம்மை நாம் பாதுகாக்கப் போகிறோம் என்பது தெரியவில்லை,

இப்படி இங்கு வந்து பாடுபட்டு பெற்ற செல்வத்தில் நாம் புதிதாக கண்டு பிடிச்சு கரியாக்கும் இரண்டு மூன்று நாள் பெரிய கல்யாணக் களரிகளும், பொன் விலைக்கு நிகரான கல் மண் கட்டிடங்களும், சென்னை அண்ணா சாலைக்கு நிகராக மதிப்பீடு பெற்று விட்ட காலி மனைகளும்…..

கண்ணைக் கட்டும நமது கல்பு சம்பாத்தியத்தால் உருவான கடையநல்லூரில் மட்டுமே அனுபவிக்கும் செல்வச்செழிப்புகள்…

மறுக்கப்பட்டஉங்க சிட்டைய தூர எரிஞ்சிட்டு அங்க போயி காலு குத்தி உங்களால நிக்க முடியுமா…

கொஞ்சம் கல்பு தாண்டிய,வெட்டியா இந்த ஜமாத்துகளுக்கு அனாவசியமாக துட்டை இறைக்கும் தெண்டம் தாண்டி(ஆமாங்க நீங்கள் அனுப்பிய காசில் அவர்கள் பாகப் பிரிவினை, வீட்டை மாளிகையாக கட்ட, மக்களை பொறியியல் படிக்க வைக்கவும் உத்வுணீங்க உங்களுக்கு ரசீது கொடுப்பாங்க), செல்வம் தேடும் முயற்சி அவசியம்…..

நம்ம புள்ளைங்களும் பொண்டாட்டியும் நம்மளை உயிரோடேயே அனாதையாக்கிருவாங்க …

கலெக்டர் வேணும் டாக்டர்கள் பொறியாளர்கள் என கைநிறைய சம்பாதிக்கும் கல்வியாளர்கள் வேணும் அதை கொஞ்சம் கவனிங்க…பாபர் மசூதி, இஸ்லாமிய இன உணர்ச்சி, கடையனல்லூர்காரங்கற பெருமை இதெல்லாம் அப்புறம் பார்ப்போம் எனக்கும் சேர்த்துத்தான் ….

படத்தை பாருங்க நம்ம கலெக்டரு உலகக் கல்வியும் மார்க்கக் கல்வியும் சேர்ந்து அவங்க வாப்பா கண்ணும் கருத்துமா வளர்த்த இஸ்லாமிய வளர்ப்பு அந்த நாற்காலியில் எப்படி ஜொலிக்குது பாருங்க…

 
Leave a comment

Posted by on December 8, 2011 in மனசார...

 

பழைய அல்வா வாசம்

அல்வா ண்ண ஒடனே நமக்கு மனசெல்லாம் இனிக்கும்… இன்னிக்கு தடுக்கி விழுந்தால் ஆயிரம் கடைகள் இருக்கு . ஆனால் அன்னிக்கு அத்திப்பூத்தாப் போல அல்வாக் கடை அங்க ஒன்னும் இங்க ஒன்னும் தான் இருந்தது.. அல்வாவைக் காட்டிலும் அவரவர் பிரச்சினை ஆயிரம் அவர்களை வேட்டையாடியது வறுமை முகமூடி போட்டுக்கொண்டு அடிக்கடி அவர்குக்கே அல்வாக் கொடுத்தது….

அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதுகளில் நான் நெல்லையில் சதக் கல்லூரியில் பயின்று வரும் காலத்தில் அப்போது சாந்தி ஸ்வீட்ஸ் லக்ஷ்மி விலாஸ் இவற்றுடன் அரசன் மற்றும் இருட்டுக்கடை ஆகியன பேமஸ்…

அதில் இருட்டுக் கடை என்பது எங்களுக்கு எங்களின் வீடுகளில் இருந்து ஆபர் செய்து வாங்கி வரச்சொல்லும் அல்வா…

அல்வா வின் இயல்பு கையில் ஒட்டாத்தன்மை அதன் மணம் ருசி இவற்றின் ஒரிஜினாலிட்டி என்பார்களே அதாவது உண்மையான வடிவம் இது இருட்டுக்கடை தான்… பார்ப்பதற்கு வேட்டிவைத்த மாமிசத்துண்டு போல கெட்டியா இருப்பினும் அதன் மணமும் ருசியும் அலாதி…

எத்தனையோ விதமான பெயரில் புதிய புதிய அல்வாக்கள் கவர்ச்சியான வண்ணங்களில் பாதாம் பிஸ்தா பழவகைகள் பால் என அவை மேலாண்மைக் கல்வியின் உதவியில் தயார் செய்யப்பட்டு நெஞ்சைக் கரிக்க வைக்கும் வண்ண ப் பொடிகளும் அதீத எண்ணெய்யுமாய் வண்ண விளக்கொளியில் வரிசைகட்டி நின்றாலும் வாசமும் நெல்லையின் பாசமும் மலரும் நினைவுகளும் உள்ளடக்கிய இருட்டுக் கடை அல்வா தான் என் முதல் தேர்வு…..

நான் சுமார் இருபத்தைந்தாண்டுகளாக என் நாசிக்கு அதன் சுய வாசத்தை அறியத் தந்திருக்கிறேன்.. இப்ப டையபட்டிஸ் வந்த பிறககும் கொஞ்சம் மட்டும் ஆசைக்கு எடுத்து சுவைக்க தயங்குவதில்லை.. கடந்த முறை இந்தியா சென்று நெல்லை ஜங்சன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது நானும் பேருந்து விட்டு இறங்கிய தருணம் கண்ணில் பட்டது நெல்லை இருட்டுக் கடை அல்வாக் கடை எனும் தட்டி… கடையைக் கண்டதும் கொஞ்சம் மனசு வாடியது… சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக எனது பழைய நினைவுகளை சுமந்த வண்ணம் அதன் பழைய பொலிவு மாறாமல் அதே காட்சியுடன் நெல்லையப்பர் கோயில் அருகில் உள்ள அந்தக் கடை தான் இவ்விதம் ஜங்சனுக்கு வந்து ஜரிகைபுடவையுடன் முகச்சாயம் பூசி ஒளிவெள்ளத்தில் மிதக்கிறதோ அதுவும் காலவெள்ளத்தில் தனது முகவரியை காணாமல் தொலைத்து விட்டதோ என கலங்கிய என் மனசுக்கு அருகில் ஒருவர் பேசுவதைக் கேட்ட போது ஆறுதல் கிடைத்தது..

இது போலியாம் உண்மைக கடை அதே இடத்திலேயே இருக்கிறது என்று சொல்வதைக் கேட்டதும் மனசும் ஆறுதலடைந்தது….

மறக்காமல் மாலையில் ஊர் திரும்புகையில் நெல்லையப்பைர் ஆலையம் சமீபம் உள்ள அந்தக் கடைக்கு சென்று அதே வாடிக்கையாய் அதே இருட்டில் நாற்பது வாட் குமிழ் விளக்கு ஒளியில கையில் பொட்டலமாக அல்வா பெற்று திரும்பும் போது நானும் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தாறில் டீசர்ட்டு ஜீன்சு பேண்டு கையில் அதே வழக்கமான தோள்பை அல்வா வுடன்….அருகில் அமர்ந்திருக்கும் பெண்களுக்குத்தக்க ஆங்கிலக் கலப்பு உரையாடல்… கையில் மறக்காமல் சீப்பு… கான்வாஸ் ஷூ வுடன்… அந்த 120 எக்ஸ் திருநெல்வேலி – புளியங்குடி விரைவு வண்டி மாலை ஆறு நாற்பது வண்டியின் வழக்கமான அந்த வாலிபகால வசந்தயாத்திரை மனசில் வந்து காலத்தின் ஓட்டத்தை கண்முன்னே காட்டிச் சென்றது…
எல்லாம் நம்மை ஓரிடத்தில் நிறுத்தி நம்மை விட்டுக் கடந்தாலும் அந்த இருட்டுக் கடை மூலமாக ஒரு சில அஃரிணைகள் மட்டுமே அப்படியே இன்னும் நம்மை பழைய காலங்களுடன் இணைத்து நினைவுறுத்துமாறு…

நம்முடனே நிற்கிறது அடுத்த விடுப்பிலும் இறுட்டுக்கடை என்னை அதே பழைய ருசி மணம் வடிவம் அனைத்துடனும் வரவேற்பதைக் காண முடியுமா….

 

மக்காவில் ஒரு மய்யித்து தொழுகை .

ஆஹா என்ன பொருத்தமான தலைப்பு .

அப்படி நான் மக்காவில் இருந்தால் நான் மக்காவாசியாகவோ அல்லது ஹஜ்ஜாளியாகவோ இருக்கலாம். ஆனால் இங்கு ஒரு திருத்தம்.

ஹஜ்ஜுபெருநாளில் நான் இருந்தது மக்காவிலிருந்து ஆயிரத்து நானூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தம்மாமில் தான் ஆயினும் ஹஜ் விடுப்பு தினங்களில் நான் மக்கா செல்வேன் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை… என் வேலை அப்படி…

வழக்கம் போல விடிந்த புதன் அன்று காலையில் ஏழு மணிக்கு மொபைலில் அழைத்த என் மனைவியின் தகவல் படி இங்கே ஹஜ்ஜுக்காக வந்திருக்கும் என் மச்சான் புலவர் சிந்தா மதார் அவர்கள் மரணித்து விட்டதான தகவல்…(என் பெரிய தந்தை கே எல் ஏ மஜீத் சாகிபு அவர்களின் மகள் மூத்தசகோதரியின் கணவர்) என்னை கொஞ்சம் உலுக்கி விட்டது. மரணம் நிச்சயம் தான்….. ஆயினும் இது ஹஜ்ஜை நிறைவேற்ற வைத்து சரியாக மினாவில் இருந்து திரும்பிய வுடன்….

மச்சான் குளிக்க வேண்டி அறையின் எதிரில் இருக்கும் குளிப்பறைக்குள் நுழைந்து தனது கடைசி கணத்தில் இறுதியான ஒரு நீண்ட பெருமூச்சை விட்டு பிரியாவிடைபெற்று பிரியமான என் தாத்தாவிடம் கூட சொல்லாமல் உடலை மட்டும் பத்திரமாக விட்டுவிட்டு பறந்து விட்டார்.

உயிர் களைந்த அவரின் உடலைப் பார்க்கவும், உயிரிருந்தாலும் உடலாய் உணர்ச்சி மறுத்து அங்கே தனித்திருக்கும் என் சகோதரிக்கு ஆறுதல் தரவும் தான் நான் மக்கா புறப்பட்டேன்.

இங்கே புறப்பாடு தொடங்கிய நேரத்தில் என்னருகில் என்னுடன் தனது சகோதரியைக் காண நிலை குலைந்து போன அண்ணன் குத்புதீன் ஆலிம் சாகிபு வும் இணைந்து கொண்டார்…

அண்ணனும் நானும் அன்று பிற்பகல் நான்கு மணிக்கு தம்மாமிலிருந்து புறப்பட்ட விமானத்தில் ஆறு மணிக்கு ஜித்தா தொட்டு, அண்ணன் ரூஹுல்லாவின் வழி காட்டுதலில் மக்கா நோக்கி தொடர்ந்தோம்…

ஹாஜிகளின் நெரிசலால் இரவு பத்து மணிக்குத்தான் மக்காவில் என் சகோதரி தங்கும் உம்முல் குரா அடைய முடிந்தது…

எங்களைக் கண்டவுடன் வேதனைகள் வெடித்துக் கிளம்ப அங்கு நானும் துக்கத்தில் துவண்டிருந்த அண்ணனும் வாடிக் கிடந்தோம்…வழக்கமான மரண வாசம் சூழ வேதனைகளின் வேட்டைக்களமாக எங்களின் கல்புகள் உடைந்து கண்ணீர் சிந்தின..

கலுங்கத்தன் அசரத்து வீட்டில் முதன்முதலில் மருமகனாக பெண்ணு கட்ட வந்த மூத்த மச்சான், எங்களை அன்போடு வளர்த்தவர், அறுபத்தொன்பது வயதுப் பிராயம் கொண்டவர், அதிர்ந்து பேச மாட்டார்.

தனது ஏழ்மைக் காலத்தில் தனது குடும்பம் மனைவி மக்களின் வாழ்வுக்காக வேண்டி முப்பது வருடங்களுக்கு முன்னால் சவுதியில் தபூக் கில் கடினமான உழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.. தொழுகையாளி…

புலவர் மாமாவின் மொத்தமான ஐந்து ஆண்மக்களில் மூத்தவர்.

இவரது சவூதி வாழ்க்கையில் என் சகோதரியிடமிருந்து செல்லும் மடல்கள் பெரும்பாலும் என் கையெழுத்து தாங்கியே அவரைச் சென்றடைந்தது..அதில் திருமணம் மற்றும் மரணசெய்திகளும் ரசம் வைக்க எளிதாக எப்படி செய்வது உள்பட என் சகோதரியின் அனைத்து எண்ணங்களையும் எனது எழுத்துக்கள் அந்தக் காகிதத்தில் உணர்ச்சியுடன் பதிக்கும்.

மச்சானின் ஊர்வரவு மற்றும் மச்சானின் கம்பெனி விசயங்களும் அக்காவுடன் நானும் அறிந்து கொள்ள முடிந்தது ஆயினும் அவர்களின் அந்தரங்க செய்திகள் வெளியில் காட்டிக் கொள்வது இல்லை..

மனைவிகளை விட்டுச் செல்லும் கணவன் மார்களின் உள்ளக் கொதிகள் அவற்றை கண்ணியமாக ஆற்றுப்படுத்தும் மனைவிமார்களின் கேவல் நிரம்பிய வார்த்தைகள் என எழுதும் நானே கசிந்து விடும் காகிதக் காலம் அது…

மச்சான் ஒவ்வொரு முறையும் ஊர் வரும் போது என்னிடம் சொல்லுவார்,” மாப்பிளை உங்களின் கையெழுத்தை தாங்கி வரும் கடிதம் தான் எனக்கு ஆயிரக்கணக்கான மயில்களுக்கப்பால் ஒரு ஆறுதல்” அவர் தன் மனைவியின் கடிதம் நோக்கினாலும் சும்மா என்னை குஷிப் படுத்த அப்படி சொல்லுவார்..

மச்சான் போய்ட்டார்… அவர் கிட்டத்திலேயே தாத்தவும் இருக்கையில்…இதே சவூதியில் அவருக்கு கடிதம் எழுதும் நானும் புனித மக்காவின் ஹரம் ஷரீபில் வியாழன் காலை சுபுஹு தொழுகையில் அவரின் உடலை சுமந்து வந்து அந்த புனித பள்ளிக்கு மிகச்சொற்ப இடைவெளியில் அவரது உயிர் சுமந்த உடல் லட்சோப லட்சம் ஹாஜிமார்களடக்கம் கையேந்தி துஆ செய்ய கண்ணில் நீர் நிறுத்தி மக்கமாநகரில் மண்ணோடு…. எங்கள் கலுங்காத்தன்அசரத்து வீட்டு மூத்த மச்சான் முதல் மருமகன் மக்காவில் நல்லடக்கம் செய்யப் பட்டார்…

 
2 Comments

Posted by on November 14, 2011 in மனசார...

 
 
Follow

Get every new post delivered to your Inbox.